ஆண்களால் மட்டுமே கறிக்கடை நடத்த முடியும் என்கிற பலரது எண்ணத்தைப் பொய்யாக்குகிறார் சுமா. மதுரையில் 25 ஆண்டுகளாக கறிக்கடை நடத்திவரும் இவர், இன்று வெற்றிகரமான தொழில் முனைவோர். கணவரை இழந்து கைக் குழந்தைகளோடு அல்லப்பட்ட சுமாவால் எப்படி இந்த உயரத்தை எட்ட முடிந்தது? “எதற்கும் தளராத உறுதிதான்” எனப் புன்னகைக்கிறார் சுமா.
மதுரை செபஸ்தியார்புரம் சிந்தாமணி சாலை பகுதியைச் சேர்ந்த சுமாவின் பூர்விகம் கேரள மாநிலம் திருவனந்தபுரம். 1996இல் திருமணமாகி மதுரை வந்தார். இவருடைய கணவர் குழந்தைராஜ், சிந்தாமணி குடிசைப்பகுதியில் கறிக்கடை நடத்தி வந்தார். மகளுக்கு ஐந்து வயதானபோது சுமா நிறைமாத கர்ப்பிணி. அப்போதுதான் இவரது வாழ்க்கையில் பேரிடி விழுந்தது. கணவர் குழந்தைராஜுவுக்குத் திடீரென்று மாரடைப்பும் அதைத் தொடர்ந்து மூளையில் பாதிப்பும் ஏற்பட்டுப் படுத்த படுக்கையானார். அவரது கறிக்கடை வருமானத்தில் ஓடிக்கொண்டிருந்த குடும்பம் நிலைகுலைந்துபோனது. ஆள் போட்டு நடத்த முடியாமல் கறிக்கடையும் மூடிக்கிடந்தது. வீட்டில் முடங்கிய கணவரையும் பராமரிக்க வேண்டும். திக்குத் தெரியாத காட்டில் சுமா திகைத்தார். பிறந்த வீடும் இவர்களைத் தாங்கிப் பிடிக்கும் அளவுக்கு வசதியானது அல்ல. கணவர் குடும்பத்து உறவினர்களும் கைவிட, வீட்டு வேலைகளுக்குச் சென்று குடும்பத்தைக் காப்பாற்ற சுமா முடிவெடுத்தார். குழந்தைகளை யாரிடமும் விட்டுவிட்டுச் செல்ல முடியாத நிலையில் அந்த வேலைக்கும் போக முடியவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஜோதிடம்
41 mins ago
ஜோதிடம்
57 mins ago
விளையாட்டு
4 hours ago
விளையாட்டு
6 hours ago
இந்தியா
7 hours ago
வணிகம்
7 hours ago
விளையாட்டு
8 hours ago
இணைப்பிதழ்கள்
8 hours ago
க்ரைம்
8 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago
தமிழகம்
10 hours ago