விவாகரத்து என வரும்போது பல பிரச்சினைகள் தலைதூக்குவதைப் பார்க்கலாம். ஒருவருடன் வாழத் தனக்கு விருப்பமில்லை என்று சாதாரணமாகப் பிரிவது நம் சமூகத்தில் அவ்வளவு சுலபமாக இருப்பதில்லை. ஏன் பிரிய விருப்பப்படுகிறார்கள் என்று வீட்டில் மட்டுமல்ல நீதிமன்றத்திலும் சொல்லியே ஆக வேண்டும். அதனால் நிறைய பெண்கள் விவாகரத்து கிடைக்க வேண்டும் என்பதற்காகவே கணவன் தன்னை அடிக்கிறான், உதைக்கிறான், கொடுமைப்படுத்துகிறான் என்கிற பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்து விவாகரத்து கோருவதும் நடக்கிறது. இருவரும் ஒப்புக்கொண்டு விவாகரத்து கோரும்போது இந்தப் பிரச்சினை வர வாய்ப்பில்லை.
இரண்டாவது பிரச்சினை ஜீவனாம்சம். இதுவும் இருவரும் ஒப்புக்கொள்ளும்படி இருந்துவிட்டால் பிரச்சினை எழுவதில்லை. ஆனால், இங்கும் இரு தரப்பிலிருந்தும் பிரச்சினைகள் முளைக்கின்றன. இருவரும் பிரிவிற்குத் தயாராக இருந்தாலும் பணப் பிரச்சினை தீராதவரை விவாகரத்து விவகாரம் நீண்டுகொண்டே போகிறது. பிள்ளைகள் இருந்தால் முதலில் அதுவே பெரிய பிரச்சினையாக நிற்கிறது. பிள்ளைகள் யாருடன் இருக்க வேண்டும் எனத் தீர்மானிக்க வேண்டும். வளர்ந்த பிள்ளைகளாக இருந்தால் ஓரளவுக்கு அவர்களே முடிவு செய்யலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
4 mins ago
உலகம்
10 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
20 mins ago
இந்தியா
24 mins ago
உலகம்
28 mins ago
இந்தியா
35 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
45 mins ago
விளையாட்டு
4 hours ago
சினிமா
4 hours ago
சினிமா
5 hours ago