ஐம்பது வயதுப் பெரியவர் ஒருவர் தன் கண் பார்வை சிறிதுசிறிதாகக் குறைந்துவருவதாக என்னிடம் பரிசோதனைக்கு வந்தார். அவரை பரிசோதித்ததில், அவர் கண்ணில் கண் நீர் அழுத்தம் (Intra ocular Pressure) அதிகமாகி கண் நரம்பு (Optic Nerve) பாதிப்படைந்து தொண்ணூறு சதவீதம் பார்வை பாதிக்கப்பட்டுவிட்டது தெரியவந்தது. ஏதாவது மாத்திரை சாப்பிட்டீர்களா என்று கேட்டபோது, பத்து ஆண்டுகளாகக் கால் வலிக்குச் சாப்பிட்டு வரும் மாத்திரைகளை என்னிடம் காட்டினார். அவை ஸ்டீராய்டு மாத்திரைகள்.
இன்னொரு நோயாளிக்கு 40 வயது இருக்கும். இறகுப்பந்து விளையாடும் போது தன் கண்ணில் அடிபட்டதாகவும் நான்கு நாள்களாக வேலைப்பளு காரணமாக மருந்துக் கடையில் மருந்து வாங்கி ஊற்றியதாகவும், ஆனால், வலி குறையவில்லை என்றும் என்னிடம் கூறினார். அவரை பரிசோதித்ததில், அவருடைய கண்ணில் நீர் அழுத்தம் அதிகமாகி வலி ஏற்பட்டது தெரியவந்தது. கண்ணில் அடிப்பட்டால்கூட கண் நீர் அழுத்தம் வருமா டாக்டர் என அவர் கேட்டார். ஆம் என்று பதிலளித்தேன்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
42 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
விளையாட்டு
3 hours ago
க்ரைம்
3 hours ago
சுற்றுச்சூழல்
3 hours ago
க்ரைம்
4 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
5 hours ago
கருத்துப் பேழை
5 hours ago
சுற்றுலா
5 hours ago