தீபாவளி என்றாலே மறக்க முடியாத அலப்பறைகள் ஒவ்வொருவருக்கும் நினைவில் இருக்கும். அப்படிப்பட்ட தீபாவளி அலப்பறைகளில் சில: பண்டிகைக் காலத்தில் பேருந்தில் செல்லும் பயணம் இருக்கிறதே, அது கொடுமையிலும் கொடுமை. ‘ஹேப்பி தீபாவளி’ என்று தோழிகளுக்குக் குறுஞ்செய்தி அனுப்பினால் அருகில் இருப்பவர் குறுகுறுவென்று மொபைலைப் பார்த்து வெறுப்பேற்றுவார். அந்த வேதனையைத் தாண்டி மொபைலை மறைத்து நோண்டிகொண்டே இருந்தால், அதே நபர் குறட்டை விட்டுக்கொண்டே அவருடைய மண்டையை நம் தோளின் மீது ‘பார்க்’ செய்திருப்பார். இதையெல்லாம் ஒருவழியாகக் கடந்து வீடு வந்து சேர்ந்தால், ஒரு கும்பல் அப்படியே நம்மை ‘பேக்’ செய்து துணிக் கடைக்குக் கூட்டிச் சென்றுவிடும். அங்கிருக்கும் கூட்டம் ஜவுளி கடையையே புரட்டி போட்டுக் கொண்டிருக்கும். அதில் புகுந்து நாமும் ஒரு துணியை எடுத்துவிட்டு வீட்டுக்குத் திரும்பும் போதுதான், ‘அந்தப் புடவைக்கு இந்த பிளவுஸ் மேட்சிங்கா இருக்கா, அந்த பேன்ட்டுக்கு இந்தச் சட்டை மேட்சிங்கா இருக்கா’ என்று யோசனையிலேயே அந்த இரவு முடிந்துவிடும்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
10 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
29 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
47 mins ago
சுற்றுச்சூழல்
57 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
52 mins ago
விளையாட்டு
1 hour ago
கருத்துப் பேழை
4 hours ago
தமிழகம்
3 hours ago