அஞ்சலி: சக்கரவர்த்தி - மும்பையில் கொடி நாட்டிய தமிழ்க் குரல்!

By திரை பாரதி

அழகான முகம், அசத்தும் வெண்கலக் குரல், சுத்தமான தமிழ் உச்சரிப்பு, இவை அனைத்தும் ஒருங்கே அமையப்பெற்றவர் சக்கரவர்த்தி. வெள்ளித்திரையில் எத்தனையோ பேர் மகாகவி பாரதியாகத் தோன்றியிருக்கிறார்கள். அவர்களில், நடிகர் திலகம் சிவாஜி கணேசன், எஸ்.வி.சுப்பையா. டி.கே.சண்முகம், மராத்தி நடிகரான சாயாஜி ஷிண்டே ஆகியோரை எப்படி மறக்க முடியாதோ, அவர்களுக்குச் சற்றும் குறையாத கம்பீரமான தோற்றப் பொருத்தத்துடன் ஒரு படம் முழுவதும் பாரதியாகத் தோன்றி, தமிழ்த் திரை வரலாற்றில் இடம்பிடித்தவர் மதுரை பெரியகுளத்தில் பிறந்து, வளர்ந்த சக்கரவர்த்தி வேலுச்சாமி.

பள்ளிப் படிப்புக்குப் பின், மதுரை அமெரிக்கன் கல்லூரியில் இளங்கலைப் பொருளியல் பட்டம் பெற்றவர். அங்கே படிக்கும்போது அவருக்குத் தமிழ்ப் பேராசிரியராக இருந்தவர் சாலமன் பாப்பையா. கவிதை, சிறுகதை எழுதுவதில் ஆர்வம் கொண்டவராக, கல்லூரி நாடகங்களில் கிடைக்கும் கதாபாத்திரம் எதுவென்றாலும் அதில் நடித்து அசத்தும் இளைஞராக சக்கரவர்த்தியைக் கண்டார் சாலமன் பாப்பையா. கல்லூரிகளுக்கு இடையிலான நாடகப்போட்டியில் பாரதியாராக நடித்து, முதல் பரிசைத் தட்டிகொண்டுவந்து கல்லூரிக்குப் பெருமை சேர்த்தார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

18 mins ago

தமிழகம்

32 mins ago

தமிழகம்

45 mins ago

தமிழகம்

55 mins ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

சினிமா

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

தமிழகம்

1 hour ago

மேலும்