தமிழில் சுதந்திரத்துக்கு முந்தைய அரசியல் சினிமா என்பது தேசாபிமான இயக்குநர் கே.சுப்ரமணியத்திடமிருந்து தொடங்குகிறது. அவருடைய நவீன நீட்சி எனச் சொல்லும்படியாக, 90களில் ‘தேசபக்தி’யை முன் வைத்து அரசியல் படங்களை எடுத்தார் மணிரத்னம். இடையில் 60களின் தொடக்கத்தில் இனம், மொழியை முன்வைத்து வெளிவந்த திராவிட சினிமாக்கள் பெரும் தாக்கத்தை உரு வாக்கின. இந்த இரு வகைமையிலிருந்தும் விலகி நிற்பவை இடது சாரித் திரைப்படங்கள்.
தொழிலாளர் ஒற்றுமைக்கும் அவர்களின் நலனுக்காகவும் குரல் எழுப்பிய இந்த வகைப் படங்களால் மக்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க முடியவில்லை. ஆனால், இன்றைக்கு அதிகார அத்துமீறல்களைப் பட்டவர்த்தனமாக முன்வைக்கும் திரைப்படங்கள் பெருகியிருப்பதற்கு அவையே அடிக்கற்கள். அந்த வரிசையில் 1961இல், நிமாய் கோஷ் ஒளிப்பதிவு செய்து, இயக்கிய ‘பாதை தெரியுது பார்’ முன்னோடித் திரைப்படம். அதன்பின்னர் 80களின் இறுதியில் கோமல் சுவாமிநாதனின் ‘அனல் காற்று’, ‘ஒரு இந்தியக் கனவு’, ஜெயபாரதியின் ‘ஊமை ஜனங்கள்’, இராம.நாராயணன் இயக்கத்தில் தெலுங்கிலிருந்து தமிழில் மறுஆக்கம் செய்யப்பட்ட ‘சிவந்த கண்கள்’, ‘சிவப்பு மல்லி’, ஜி.ராமநாயுடு இயக்கத்தில், இடதுசாரித் தலைவர் தா.பாண்டியன் வசனத்தில் வெளிவந்த ‘சங்க நாதம்’, ஹரிஹரன் இயக்கத்தில் வெளியான ‘ஏழாவது மனிதன்’, அருண்மொழி இயக்கிய ‘காணி நிலம்’, ‘ஏர்முனை’ ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
1 min ago
கல்வி
34 mins ago
உலகம்
25 mins ago
தமிழகம்
35 mins ago
இந்தியா
49 mins ago
சுற்றுலா
1 hour ago
சினிமா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago