மரக்கன்று நடுதல்: அறிவியல்பூர்வமாகத்தான் செயல்படுகிறோமா?

By Guest Author

பெயருக்கு மரக்கன்று நடும் விழா எடுத்து, எந்த வகையான மரங்களை நடுகிறோம், அவை அப்பகுதியைச் சேர்ந்தவையா? இல்லையா? அவற்றை நடுவதால் என்னென்ன பாதிப்புகள் ஏற்படும் என்கிற புரிதல் இல்லாமல் லட்சக்கணக்கில் மரங்களை நடுவதால் எந்தப் பயனும் இல்லை. விதைப் பந்துகளைப் பார்த்த இடங்களில் எல்லாம் வீசி எறிவதால் காடு வளர்ந்து விடாது; ஆற்றோரத்தில் மரத்தை நட்டால் ஆறுகளை மீட்டெடுக்க முடியாது; வெட்டவெளிகளில் யூகலிப்டஸ் மரங்களையும், கடலோர மணற்பகுதிகளில் சவுக்கு மரங்களையும் நட்டால் அது காடாகி விடாது; அயல் மரங்களை ஆயிரக்கணக்கில் நட்டுவிட்டால் நகரங்களுக்குள் காட்டை ஏற்படுத்திவிட முடியாது. இவை எதுவுமே சரியான காட்டு மீட்பு நடவடிக்கைகள் அல்ல.

உலகெங்கிலும் கானகங்கள் நாளுக்கு நாள் குறைந்துகொண்டே வருகின்றன. உலகளவில் 1990இலிருந்து 17.8 கோடி ஹெக்டர் காட்டுப் பரப்பு அழிக்கப்பட்டுள்ளது. அதாவது, இந்தியாவின் பரப்பளவில் கிட்டத்தட்ட பாதியளவு அழிக்கப்பட்டுள்ளது. காலநிலை மாற்றத்தினால் ஏற்படவிருக்கும் பாதிப்புகளை ஓரளவுக்காவது குறைத்துக்கொள்ளவும், பல்லுயிர்களைப் பாதுகாக்கவும் இரண்டு முக்கியச் செயல்பாடுகளை முன்னெடுத்தாக வேண்டும். முதலாவது, எஞ்சியிருக்கும் கானகப் பகுதிகளை மேலும் அழிக்காமலும் சீரழிக்காமலும் பாதுகாத்தல்; இரண்டாவது, அழிவுக்குள்ளான, சீரழிவுக்குள்ளான கானகங்களை அறிவியல்பூர்வமான முறையில் சூழலியல்சார் மீளமைப்புச் செய்தல்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

உலகம்

1 hour ago

இந்தியா

3 hours ago

சினிமா

2 hours ago

விளையாட்டு

2 hours ago

சினிமா

2 hours ago

உலகம்

3 hours ago

தமிழகம்

3 hours ago

தமிழகம்

4 hours ago

தமிழகம்

4 hours ago

மேலும்