போலி அறிவியல், சமூகத்தின் பெருங்கேடு

By Guest Author

இந்திய விலங்குகள் நல வாரியம் சமீபத்தில் கடந்த காதலர் தினத்தைப் ‘பசு தழுவும் தினம்’ என்று நகைப்புக்குரிய முறையில், பிறப்பித்த ஆணையைப் பின்னர் திரும்பப் பெற்றுக்கொண்டது. பசுவைப் புனிதமாக பூஜிப்பது அவ்வாறு நம்புபவர்களின் உரிமை. அந்தக் கருத்தை விமர்சனம் செய்வதற்கு உரிமை உள்ளது போலவே வழிபடுவதற்கும் உரிமை உண்டு. ஆயினும் இந்தியக் குடிமக்கள் பசுக்களைத் தழுவ வேண்டும் என்ற ஆணையை அரசு நிறுவனம் ஏன் வெளியிட வேண்டும்? வெளியிட்ட ஆணையை ஏன் திரும்பப் பெற வேண்டும்?

‘துளசிச் செடி ஓசோன் வாயுவை உமிழ் கிறது. எனவே, துளசிச் செடி வளர்த்து புவி வெப்பமடைதலைக் கட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம்’ என்ற போலிச் செய்தி, சமூக வலைதளங்களின் வழியே உங்களுக்கும் வந்து சேர்ந்திருக்கலாம். துளசிச் செடி உள்பட எந்தவொரு தாவரமும் கணிசமான ஓசோன் வாயுவை உற்பத்தி செய்ய முடியாது. அது மட்டுமல்ல, பூமியிலிருந்து 15 கி.மீ. உயரத்தில் இருந்தால்தான் சூரியனின் நச்சுப் புறஊதாக்கதிரிலிருந்து ஓசோன் படலம் நமக்குப் பாதுகாப்பு தரும். ஆனால், தரைப் பகுதியில் நாம் சுவாசிக்கும்படியாக ஓசோன் வாயு இருந்தால், அது நமக்கும் விலங்குகளுக்கும் நஞ்சு. இப்படிப்பட்ட போலிச் செய்தியைப் பகிர்வதற்கு முன்னால் ஏன் நாம் சரிபார்ப்பதில்லை?

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

31 mins ago

வலைஞர் பக்கம்

51 mins ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

2 hours ago

இந்தியா

3 hours ago

ஜோதிடம்

3 hours ago

ஜோதிடம்

4 hours ago

மேலும்