ஜோனதன் ஸ்விப்ட் எழுதிய ‘கலிவரின் பயணங்கள்’ நூலில், லில்லிபுட் தேசத்தின் குட்டி மனிதர்களைச் சந்தித்த அனுபவம் கொண்ட கலிவர், அடுத்த பயணத்தின்போது பல மடங்கு உயரம் கொண்ட மனிதர்கள் வாழும் ப்ராப்டிங்நாக் தேசத்தில் மாட்டிக் கொள்வார். அப்போது, லில்லிபுட் மனிதர்களின் பார்வையில் தான் ராட்சதனாகக் காட்சியளித்ததற்கு நேர் எதிராக, ப்ராப்டிங்நாக் ‘மனித மலைக’ளின் பார்வையில் ஒரு பொம்மை போல காட்சியளிப்பதாக நாணுவார். ‘லில்லிபுட் மனிதர்கள் இன்னும் சிறிய உருவம் கொண்ட மனிதர்கள் வாழும் இடத்துக்குச் சென்றால் என்ன நினைப்பார்கள்? ப்ராப்டிங்நாக் மனிதர்களே பிரமிக்கும் அளவுக்குப் பிரம்மாண்ட மனிதர்கள் வாழும் தேசமும் பூமியில் இருக்கலாம் அல்லவா?’ என்றெல்லாம் நினைத்துக்கொள்வார். செல்போன் யுகம் தொடங்குவதற்கு முந்தைய காலத்தில் சிறுநகரங்களில் வளர்ந்தவர்கள் ஏறத்தாழ கலிவர்கள்தான்.
நகரத்தின் மெல்லிய நிழல் விழுந்த, மிகச் சில வசதிகள் கொண்ட சிறுநகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் கிராமங்களுக்குச் செல்லும்போது, ‘16 வயதினிலே’ கால்நடை டாக்டர் கணக்காக ஸ்டைல் காட்டுவார்கள். நெல் வயல்களைப் பார்த்துவிட்டு, “அப்படீன்னா... அரிசிங்கிறது மரத்துல காய்க்கிறது இல்லையா?” என்கிறரீதியில் அலம்பல் செய்வார்கள். நாள்கணக்கில் துவைத்திராத ஜீன்ஸை அணிந்துகொண்டு, வேட்டி கட்டிய மனிதர்களை வேடிக்கை பார்ப்பார்கள். ஆனால், சென்னை போன்ற பெருநகரங்களுக்குச் செல்லும்போது, எல்ஐசி கட்டிடங்களையே ஏற இறங்கப் பார்ப்பார்கள். மெரினாவில் உலவும் மனிதர்களைப் பார்த்துப் பொறாமைப்படுவார்கள். “பீச் இன்னைக்கு லீவு நைனா” என்று சென்னைவாசிகள் செல்லப் பொய் சொன்னாலும் நம்பிவிடுவார்கள். புறநகர் ரயில் பயண அனுபவங்களில் பூரிப்பார்கள்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
இந்தியா
16 mins ago
இந்தியா
34 mins ago
ஆன்மிகம்
42 mins ago
இந்தியா
46 mins ago
உலகம்
33 mins ago
கருத்துப் பேழை
4 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
1 hour ago
உலகம்
1 hour ago
இந்தியா
2 hours ago
கல்வி
5 hours ago