பல்லாயிரம் ஆண்டு பழமையுடைய நகரம் திருநெல்வேலி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில்தான் திருநெல்வேலி என்று நாம் இன்று காணும் நகரம் உருக்கொள்ளத் தொடங்கியது. கிறித்துவ மதத்தின் வருகை இந்த நகரின் கல்வி அறிவை மேம்படுத்தியது. சுற்றுப்பட்டு ஊர்களிலிருந்து திருநெல்வேலிக்கு கல்விக்காக வந்தவர்கள் பலருண்டு. அந்தப் பகுதியில் தமிழகத்தின் ஆக்ஸ்போர்டு என்கிற விளிப் பெயரும் இந்த நகருக்கு உண்டு. சினிமா பார்க்க, துணி எடுக்க, பலசரக்கு வாங்க, பலகாரம் வாங்க எனத் திருநெல்வேலிக்குப் பெயர்ந்து திரும்பும் அந்தப் பகுதி மக்கள் இந்த நகரின் ஆதாரமாக இருக்கிறார்கள். அதை வைத்து வியாபாரம். பீடி சுற்றுவதிலிருந்து துணிக்கடை, பலகாரக் கடை என ஆயிரக்கணக்கான உதிரித் தொழிலாளர்களைக் கொண்ட மாநகரம் இது. இந்தியா உலகமமயமாக்கலுக்குள் வந்த பிறகும் தன் தொன்மையைக் கைவிடாத நகரமாக திருநெல்வேலி இருக்கிறது. அன்றாடப்பாட்டுக்குள் தங்கள் அன்றாடத்தை எளிதாக்கிக்கொண்டு தாமிரபரணி நீருடன் தங்கள் தாகத்தை நிறுத்திக் கரையேறும் எளிய மக்கள்தான் தங்கள் வாழ்க்கைக்குள் இந்த மாறாத் தன்மையை மடித்துவைத்துள்ளனர்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
ஆன்மிகம்
5 mins ago
ஆன்மிகம்
13 mins ago
ஆன்மிகம்
31 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago