பக்தி மார்க்கத்தில் தொடங்கி ஞான மார்க்கத்தை அடைந்தது வள்ளலாரின் மெய்யியல் தேடல். சாதிகளையும் சமயங்களையும் மட்டுமல்ல, உருவ வழிபாட்டையும் அவர் கடந்து நின்றார். தெய்வம் என்று சொல்லி தன்னை வணங்க முற்படுவோரைக் கண்டு பரிதாபப்பட்டார். துறவுக்குரிய துவராடை தவிர்த்து வெள்ளாடை தரித்தார். அரை நூற்றாண்டு (1823-1874) காலமே வாழ்ந்த அவர், தனது உள்ளத்து உணர்வுகளைத் தோத்திரங்களிலிருந்தே தொடங்கினார். ஆறாம் திருமுறையை நோக்கிய அவரது அருட்பா பயணத்தின் தொடக்கம் தமிழ்க்கடவுள் முருகனைப் போற்றித் துதிப்பதாக அமைந்தது.
நக்கீரரின் திருமுருகாற்றுப்படையிலிருந்து தொடங்கி பல்லாயிரக்கணக்கில் பாடப்பட்டிருக்கும் முருகன் துதிகளில் வள்ளலாரின் பாடல்களுக்குத் தனிச்சிறப்பான இடமுண்டு. சென்னை கந்தகோட்டத்துப் பெருமானைப் பாடிய தெய்வமணிமாலை அவற்றில் ஒன்று. அருள்வாழ்வு பெறுவதற்கு உலகியல் பொருள்வாழ்வின்பால் ஆசை துறக்க வேண்டும் என்பதுதான் தெய்வமணிமாலையின் வேண்டுதல். 31 பாடல்களைக் கொண்ட அம்மணிமாலையில் ‘ஒருமையுடன் நினது திருமலரடி’ எனத் தொடங்கும் பாடல், இசைவிழா மேடைகளில் இன்றும் பாடப்படுவது. ‘கொஞ்சும் சலங்கை’ திரைப்படத்திலும் இடம்பெற்றுள்ளது. உள்ளம் உருகி உருகி பாடப்படும் பாடல் இது. இப்பாடலை, மளமளவென்று வார்த்தைகளைக் கொட்டி, பிரபல வித்வான் ஒருவர் பாடியதைக் குறித்து எழுத்தாளர் கல்கி தனது கட்டுரையொன்றில் வருத்தப்பட்டுள்ளார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
14 mins ago
தமிழகம்
25 mins ago
இந்தியா
19 mins ago
தமிழகம்
36 mins ago
வாழ்வியல்
27 mins ago
இந்தியா
41 mins ago
தமிழகம்
1 hour ago
சினிமா
58 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
க்ரைம்
1 hour ago