ஆனந்த ஜோதி

குரு​வாய் வரு​வாய் அருள்​வாய் குக​னே!

செய்திப்பிரிவு

பாரத தேசத்​தில் வாழ்ந்த மகான்​களுள் அருணகிரி​நாதரும் ஒரு​வர். திரு​வண்​ணா​மலைத் திருத்​தலத்​தில் கிபி 15-ம் நூற்​றாண்​டில் வாழ்ந்​து, முரு​கப் பெரு​மானின் அருளை பரிபூரண​மாகப் பெற்ற இவர், ஆறு​முகப் பெரு​மானுக்கு திருப்​பு​கழ், திரு​வகுப்​பு, கந்​தரந்தா​தி, கந்​தர் அநுபூ​தி, கந்​தரலங்​காரம், வேல் விருத்​தம், மயில் விருத்​தம் முதலிய 6 நூல்​களை படைத்​தருளி​னார்.

இவற்​றில் மிக​வும் சிறிய அளவில் கந்​தர் அநுபூதி இருந்​தா​லும், பொருளில் பெரியது. கந்​தன் என்ற சொல்​லுக்கு பகைவர்​களின் ஆற்​றலை வற்​றச் செய்​பவர், ஆறுரு​வும் ஒன்​றாய் இணைந்​தவர், ஆன்​மாக்​களுக்கு பற்​றுக் கோடாய்த் திகழ்​பவர் என்று பொருள் கொள்​ளலாம்.

அநுபூதி என்​ப​தற்கு ஆன்மா இறையோடு ஒன்​றி​யிருப்​பது என்​பது பொருளாகும். உலகப்​பற்று இருக்​கும்​போதே, பற்​றுக் கோடா​யிருக்​கும் கந்​தனைப் பற்​றிக் கொண்​டால், பந்​தத்​தில் இருந்து விடு​பட்டு ஆன்மா அவனோடு ஒன்றி அவனரு​கில் திளைத்​திருக்​கும் என்​பது கந்​தர் அநுபூதி உணர்த்​தும் பொருளாகும்.

51 பாடல்​களைக் கொண்டு விளங்​கும் இந்​நூலுக்கு பதவுரை, பொருளுரை, விரிவுரை ஆகிய​வற்றை அளித்​துள்​ளார் ஆசிரியர் இராதா கிருஷ்ணன் மாது. பாடல்​கள் விளக்​கத்​தின் இடை​யிடையே பேரா சிரியர் இரா.இ​ரா​தாகிருஷ்ணன், கி.​வா.ஜகந்​நாதன், கிரு​பானந்த வாரி​யார் சுவாமிகள், திருபட்​டுச்​சாமி ஓது​வார் ஆகியோரின் கருத்​துகள் பயன்​படுத்​தப்​பட்​டிருப்​பது குறிப்​பிடத்​தக்​கது.

கந்தரநுபூதி (மூலமும் உரையும்); முனைவர் இராதா கிருஷ்ணன் மாது; விலை: ரூ.120; அகஸ்தியர் பதிப்பகம், தெப்பக்குளம், திருச்சி; போன்: 043127000, 044-42187750, 8220470061

ஆன்ம லாபம் தரும் திரு​வாசகம்: அனை​வரை​யும் மிக எளி​தில் வயப்​படுத்தி பக்தி வெள்​ளத்​தில் படியச் செய்​யும் நூலாக திரு​வாசகம் விளங்​கு​கிறது. இந்​நூல் மாணிக்​க​வாசகப் பெரு​மானுடைய பேரன்​பின் பிழம்​பாகத் திகழ்​கிறது. தன்னை ஒரு​முறை ஓது​வோரை​யும் உள்​ளம் உருக்கி ஒளி கூட்​டு​கிறது. ஒவ்​வொரு பாடலும் தேனாக இனித்து இறைவனின் அனுபவத்தை விளக்​கு​கிறது. திரு​வாசகத்தை அனை​வரும் பொருள் உணர்ந்து ஓதிப் பயன் பெறும் வகை​யில் பேராசிரியர் ஆ.ஆனந்​த​ராசன் இந்​நூலை படைத்​துள்​ளார். ஒவ்​வொரு பதி​க​மும் முடி​யும் இடத்​தில் அதன் பொருள்​நிலையை புலப்​படுத்​தும் விளக்​க​வுரை கொடுக்​கப்​பட்​டுள்​ளது.

சிவபு​ராணம், கீர்த்​தித் திரு​வகவல், திரு​வண்​டப் பகு​தி, திரு​வெம்​பாவை, திரு​வம்​மானை, திருச்​சாழல், திரு​வுந்​தி​யார், குயிற்​பத்​து, திருப்​பள்​ளியெழுச்​சி, அடைக்​கலப்​பத்​து, திருக்​கழுக்​குன்​றப் பதி​கம், கண்ட பத்​து, குழைத்த பத்​து, உயிருண்​ணிப் பத்​து, அச்​சப் பத்​து, பிரார்த்​தனைப் பத்​து, யாத்​திரைப் பத்​து, எண்​ணப்​ப​தி​கம், திருப்​புலம்​பல், திரு​வெண்​பா, பண்​டாய நான்​மறை, திருப்​படை​யாட்​சி, ஆனந்​த​மாலை, அச்​சோப்​ப​தி​கம் உள்​ளிட்ட பதி​கங்​களை​யும் அதன் விளக்​க​வுரையை​யும் அனை​வரும் உணரும் வண்​ணம் ஆசிரியர் தெளிவுபடுத்​தி​யுள்​ளார்- கே.சுந்​தர​ராமன்

திரு​வாசகம்; பேராசிரியர் ஆ.ஆனந்​த​ராசன்; விலை: ரூ.240; நர்​மதா பதிப்​பகம், சென்​னை; தொடர்​புக்​கு: 9840226661, 9840932566.

திரு​வஹீந்​திரபுரம் புகழ்​மாலை: 108 வைணவ திவ்ய தேசங்​களில் நடு​நாட்​டுத் திருப்​ப​தி​யாக திரு​வஹீந்​திரபுரம் விளங்​கு​கிறது. ஸ்ரீமத் நிக​மாந்த மகாதேசிகன் இத்​தலத்​தில் 40 ஆண்​டு​களுக்​கும் மேலாக எழுந்​தருளி​யிருந்து ஸ்ரீதேவ​நாதனை தரிசித்​து, பல கிரந்​தங்​களை தமிழ், வடமொழி, பிராக்​ருத மொழி​யில் இயற்​றி​யுள்​ளார். இத்​தலத்​தில் எம்​பெரு​மானுக்கு நடை​பெறும் வேத பாராயண சேவை​யின் பலன் உலகில் உள்ள அனை​வருக்​கும் கிடைக்க ஸ்ரீவேத பரி​பாலன ஸபை முழு முயற்​சி​யுடன் செயல்​பட்டு வரு​கிறது.

இச்​சபை மூலம் வேத வித்​வான்​கள் கௌரவிக்​கப்​படு​வது, வேத பாராயண கைங்​கர்​யபரர்​களுக்கு சன்​மானம், வஸ்​திரம் சமர்ப்​பிப்​பது, ததீ​யா​ராதனை, பெரு​மாளுக்கு தளிகை சமர்ப்​பிப்​பது, நூல்​கள் வெளி​யிடு​வது உள்​ளிட்ட சேவை​கள் நடை​பெற்று வரு​கின்​றன. ஸ்ரீபாதுகா சஹஸ்​ரம், ஸ்ரீதேசிகன் வைபவம், லகு திரு​வா​ராதன கிரமம், ஸ்ரீதேசிக பிரபந்​தம் உள்​ளிட்ட நூல்​களை வெளி​யிட்ட சபை, திரு​வஹீந்​திரபுரம் திருத்​தலத்​தின் சம்ப்​ரோஷணத்தை முன்​னிட்​டு, திரு​வஹீந்​திரபுரம் தலத்​துப் பாட்​டின் இரண்டு வகை வியாக்​கி​யானங்​கள், தெளிவுரை, வண்ண வரைபடங்​கள், வர்​ணனை​யுடன், இருந்​தண் மாநிலம் என்ற இந்​நூலை வெளி​யிட்​டுள்​ளது. இந்​நூல் ஸ்ரீ உ.வே.​முகுந்​தாச்​சா​ரி​யார் ஸ்வாமி, என்​.கே சேஷாத்ரி ஸ்வாமி குடும்​பத்​தினர், கருடபுரம் வரத​ராஜன் தேசிகன், ஸ்ரீமதி கௌஸ்​து​பா, ஸ்ரீமான் ரகு​ராமன் உள்​ளிட்​டோரின் சீரிய முயற்​சி​யில் வெளிவந்​துள்​ளது குறிப்​பிடத்​தக்​கது.

இருந்​தண் மாநிலம்; ஸ்ரீதேவ​நாதன் சந்​நிதி மஹா சம்ப்​ரோக் ஷண மலர்; ஸ்ரீவேத பரி​பாலன ஸபா, திரு​வஹீந்​திரபுரம்; tvpm.vps@gmail.com, tvpvpsabha@gmail.com

SCROLL FOR NEXT