கனவு நிறைவேறியது: தோனிக்கு எதிராக விளையாடியது குறித்து சந்தீப் சர்மா சிலாகிப்பு

By செய்திப்பிரிவு

சென்னை: கனவு நிறைவேறியது என்று நேற்றைய ஆட்டத்தின் கடைசி ஓவரை வீசி ராஜஸ்தான் ராயல்ஸ்க்கு வெற்றி பெற்றுத் தந்த சந்தீப் சர்மா தெரிவித்துள்ளார்.

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் 175 ரன்கள் எடுத்தது இதனைத் தொடந்து பேட்டிங் செய்த சென்னை அணியில் முக்கிய வீரர்கள் ஆட்டமிழந்தாலும் தோனி - ஜடேஜா இணை சிறப்பாக விளையாடி கடைசிவரை போட்டியை எடுத்துச் சென்று ராஜஸ்தான் அணிக்கு கடும் போட்டியை அளித்தது.

கடைசிப் பந்தில் 5 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் ராஜஸ்தான் அணியின் சந்தீப் சர்மா தோனிக்கு யாக்கர் வீசி வெறும் இரண்டு மட்டும் விட்டுக் கொடுத்தார். இதனால் மூன்று ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி பெற்றது.

இப்போட்டியில் 3 ஓவர்கள் பந்து வீசி 30 ரன்கள் விட்டுக் கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார் சந்தீப் சர்மா.

இந்த நிலையில் கடைசி ஓவர் குறித்து சந்தீப் சர்மா தனது ட்விட்டர் பக்கத்தில், “ உங்களுடைய 200 வது ஐபிஎல் போட்டிக்கு வாழ்த்துகள் தோனி பாஜி...உங்களுடன் இந்தக் களத்தை பகிர்ந்து கொள்வதில் பெருமை கொள்கிறேன். எப்போது நன்றியுடன் இருப்பேன். என் கனவு நிறைவேறியது.” என்று பதிவிட்டுள்ளார்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

3 hours ago

இந்தியா

4 hours ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

5 hours ago

சுற்றுச்சூழல்

6 hours ago

விளையாட்டு

7 hours ago

இந்தியா

9 hours ago

வலைஞர் பக்கம்

10 hours ago

இந்தியா

10 hours ago

தமிழகம்

10 hours ago

இந்தியா

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்