தோஹா: நடப்பு ஃபிஃபா உலகக் கோப்பை தொடரின் குரூப் ‘பி’ சுற்று போட்டியில் இங்கிலாந்து மற்றும் ஈரான் அணிகள் விளையாடின. இதில் இங்கிலாந்து அணி 6 - 2 என்ற கோல் கணக்கில் ஈரானை வீழ்த்தியது.
இந்த போட்டி கத்தார் தலைநகர் தோஹாவில் உள்ள கலீஃபா சர்வதேச மைதானத்தில் நடைபெற்றது. இதில் தொடக்கம் முதலே இங்கிலாந்து அணி ஆதிக்கம் செலுத்தியது. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் 3 - 0 என முன்னிலை வகித்தது ஹேரி கேன் தலைமையிலான இங்கிலாந்து அணி.
தொடர்ந்து இரண்டாவது பாதியில் மேலும் ஒரு கோலை பதிவு செய்து 4 - 0 என்ற எண்ணிக்கையில் முன்னிலை பெற்றது. ஈரான் அணி ஸ்ட்ரைக்கர்களுக்கு பந்து பாஸ் ஆகவே இல்லை. ஆட்டத்தின் 65-வது நிமிடத்தில் ஈரான் வீரர் மெஹ்தி, தனக்கு கிடைத்த வாய்ப்பை கோலாக மாற்றினார்.
ஆனாலும் அடுத்த சில நிமிடங்களில் மேலும் இரண்டு கோல்களை பதிவு செய்து இங்கிலாந்து 6 - 1 என லீட் எடுத்தது. இறுதியில் எக்ஸ்ட்ரா டைமின் 13-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றினார் மெஹ்தி. ஆட்ட நேர முடிவில் 6 - 2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பில் சாக்கா இரண்டு கோல்களை பதிவு செய்தார். ஜூட், ஸ்டெர்லிங், மார்க்கஸ், ஜேக் ஆகியோர் தலா ஒரு கோல் பதிவு செய்திருந்தனர்.
முக்கிய செய்திகள்
விளையாட்டு
17 mins ago
தமிழகம்
17 mins ago
தொழில்நுட்பம்
40 mins ago
சினிமா
58 mins ago
வாழ்வியல்
40 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
வணிகம்
1 hour ago
சினிமா
1 hour ago
கருத்துப் பேழை
2 hours ago
உலகம்
1 hour ago
வணிகம்
1 hour ago