தேசிய பூப்பந்தாட்ட போட்டியில் தமிழக மகளிர் அணி சாம்பியன்

By செய்திப்பிரிவு

சென்னை: தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து போட்டியில் தமிழக மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது.

40-வது தேசிய சப்-ஜூனியர் பூப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி ஆந்திராவில் கடந்த 8-ம் தேதி முதல் 12-ம் தேதி வரை நடைபெற்றது. 18 மாநிலங்களைச் சேர்ந்த அணிகள் கலந்துகொண்ட இந்தத் தொடரில் தமிழ்நாடு மகளிர் அணி தங்கப் பதக்கம் வென்றது. தமிழக அணி அரை இறுதியில் 35-24 மற்றும் 35-26 என்ற கணக்கில் கர்நாடகாவை வீழ்த்தியது.

தொடர்ந்து நடைபெற்ற இறுதிச் சுற்றில் தமிழக மகளிர் அணி 35-28, 28-35, 35-28 என்ற கணக்கில் ஆந்திராவை விழ்த்தியது.

தமிழக அணியில் திருவள்ளூர் மாவட்டம் கத்திவாக்கம் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவி எஸ்.சமீதாவும் இடம் பெற்றிருந்தார். இந்த அணிக்கு பயிற்சியாளராக ஐ.சார்லஸ் ராஜ்குமாரும், மேலாளராக ரமேஷும் பணியாற்றினர்.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE