சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு விளையாடும் மே.இ.தீவுகளின் டிவைன் ஸ்மித், கேப்டன் தோனியை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
பொதுவாக எந்த ஒரு கிரிக்கெட் வீரரும் தான் விளையாடும் தேசிய அணியை புகழ்ந்து பேசுவது புரிந்து கொள்ளக் கூடியது. ஆனால் டிவைன் ஸ்மித் ஒரு தனி உரிமையாளர் அணிக்கு விளையாடியதை பெருமை பொங்கும் குதூகலத்துடன் வர்ணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
பிடிஐ செய்தி நிறுவனத்திடம் அவர் பேசும்போது, “நான் விளையாடும் அணிகளிலேயே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே சிறந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் ஓய்வறையில் நாம் நிம்மதியாக இருக்கலாம். அனைத்து விதங்களிலும் நம்மீது அக்கறை இருக்கும்.
ஸ்டீபன் பிளெமிங் போன்ற ஒரு பயிற்சியாளர், சுரேஷ் ரெய்னா போல ஒரு நண்பர்.. இவையல்லாமல் அனைத்திற்கும் மேலாக எம்.எஸ்.தோனி. நான் சென்னை அணிக்கு வந்தவுடனேயே நமது வீட்டிலிருப்பது போன்ற சூழல் இருந்தது.
தோனியைப் பொறுத்தவரை யாரும் வாய்ப்புகள் தரவில்லை என்று குற்றம் காண முடியாது. அவர் நிறைய வாய்ப்புகளை வழங்குவார், பிறகு அந்த வீரர்தான் அதனை மேலே எடுத்துச் செல்ல வேண்டும். தோனி ஒரு நேர்மையான கிரிக்கெட் வீரர். உலகின் தலைசிறந்த வீரர்களில் ஒருவர். சிந்திக்கும் மூளை படைத்தவர்.
எதைப்பற்றியும் கவலைப்படாமல் சுதந்திரமாக விளையாட வேண்டும் என எப்போதும் வலியுறுத்துபவர் தோனி.
கடந்த இரண்டு தொடர்களாக தோனியின் கேப்டன்சியை நெருக்கமாக கவனித்து வருகிறேன். அவற்றிலிருந்து பலவற்றை மனதில் எடுத்துக் கொண்டு எனது ஆட்டத்தில் அவற்றை உள்நுழைத்துள்ளேன். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் விளையாடியதும், தோனியிடம் நிறைய உரையாடியதும் என்னை சிறந்த கிரிக்கெட் வீரராக உருவாக்கியுள்ளது” என்றார் டிவைன் ஸ்மித்.
முக்கிய செய்திகள்
தொழில்நுட்பம்
14 mins ago
சினிமா
1 hour ago
க்ரைம்
1 hour ago
விளையாட்டு
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
க்ரைம்
2 hours ago
சுற்றுச்சூழல்
2 hours ago
இந்தியா
3 hours ago
சினிமா
3 hours ago