சொர்க்க வாசல் தரிசனத்துக்காக ரூ.300 ஆன்லைன் டிக்கெட் நாளை வெளியீடு

By செய்திப்பிரிவு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஜனவரி 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும். இதற்காக நாளை 24-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதளத்தில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட உள்ளது. மேற்கூறிய 10 நாட்களுக்கு தினமும் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 2.5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.

ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசி வருவதை முன்னிட்டு, 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அன்றைய தினம், கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், 27-ம் தேதி காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

இந்தியா

28 mins ago

இந்தியா

37 mins ago

இந்தியா

17 mins ago

இந்தியா

59 mins ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

5 hours ago

விளையாட்டு

8 hours ago

விளையாட்டு

10 hours ago

இந்தியா

11 hours ago

வணிகம்

12 hours ago

விளையாட்டு

12 hours ago

மேலும்