திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஜனவரி 2-ம் தேதி சொர்க்க வாசல் திறக்கப்பட உள்ளது. ஜனவரி 11-ம் தேதி வரை சொர்க்க வாசல் தரிசனம் அமலில் இருக்கும். இதற்காக நாளை 24-ம் தேதி சனிக்கிழமை காலை 9 மணிக்கு திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் tirupatibalaji.ap.gov.in என்கிற இணையதளத்தில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் வெளியிட உள்ளது. மேற்கூறிய 10 நாட்களுக்கு தினமும் 25 ஆயிரம் டிக்கெட்டுகள் வீதம் 2.5 லட்சம் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளன.
ஜனவரி 2-ம் தேதி வைகுண்ட ஏகாதசி வருவதை முன்னிட்டு, 27-ம் தேதி செவ்வாய்க்கிழமை கோயில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. அன்றைய தினம், கோயில் முழுவதும் வாசனை திரவியங்களால் சுத்தம் செய்யப்பட உள்ளது. காலை 6 மணி முதல் 10 மணி வரை கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளதால், 27-ம் தேதி காலை 11 மணிக்கு பின்னரே பக்தர்கள் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட உள்ளனர்.
முக்கிய செய்திகள்
இந்தியா
28 mins ago
இந்தியா
37 mins ago
இந்தியா
17 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
1 hour ago
ஜோதிடம்
4 hours ago
ஜோதிடம்
5 hours ago
விளையாட்டு
8 hours ago
விளையாட்டு
10 hours ago
இந்தியா
11 hours ago
வணிகம்
12 hours ago
விளையாட்டு
12 hours ago