இளநீர்ப் பாயசம்
என்னென்ன தேவை?
இளநீர் 2 (வழுக்கை பதம்)
பனங்கற்கண்டு 200 கிராம்
வறுத்த சேமியா 1 கைப்பிடி
நெய், ஏலக்காய், முந்திரி, திராட்சை சிறிதளவு
எப்படிச் செய்வது?
இளநீரையும் சதைப் பகுதியையும் மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும். பனங் கற்கண்டைத் தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும். ஏலக்காய், முந்திரி, திராட்சையை நெய்யில் வறுக்கவும். பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் விட்டுக் கொதிக்கவிடவும். அதில் சேமியாவைச் சேர்க்கவும். வறுத்த ஏலக்காய், முந்திரி, திராட்சையை அதில் சேர்த்துக் கொதிக்கவிடவும். பின்னர் அரைத்த இளநீர், பனங் கற்கண்டு இரண்டையும் சேர்த்து நன்கு கிளறி, பாயசம் பதத்தில் இறக்கவும். விரும்பினால் காய்ச்சி ஆறிய பாலையும் சேர்க்கலாம். இளநீர் சதைப் பகுதி, பனங் கற்கண்டு, ஏலக்காய் இந்த மூன்றையும் மிக்ஸியில் சிறிது தண்ணீர் சேர்த்து அரைத்து வடிகட்டி, ஃபிரிட்ஜில் வைத்தும் அருந்தலாம்.
முக்கிய செய்திகள்
கார்ட்டூன்
3 hours ago
கருத்துப் பேழை
4 hours ago
இந்தியா
38 mins ago
இந்தியா
39 mins ago
இந்தியா
38 mins ago
இந்தியா
42 mins ago
இந்தியா
59 mins ago
இந்தியா
48 mins ago
தமிழகம்
3 hours ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
1 hour ago