ஜன.29-ல் ஓடிடியில் வெளியாகிறது த்ரிஷாவின் ‘ராங்கி’

By செய்திப்பிரிவு

த்ரிஷா நடிப்பில் திரையரங்குகளில் வெளியான ‘ராங்கி’ திரைப்படம் ஜனவரி 29-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ உள்ளிட்ட படங்கிய எம்.சரவணன் இயக்கத்தில் த்ரிஷா நடிக்கும் படம் ‘ராங்கி’. ஏ.ஆர்.முருகதாஸ் கதை எழுதியுள்ள இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. சி.சத்யா இசையமைத்துள்ள இப்படம் கடந்த டிசம்பர் 30-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஒரு அழகான காதல் கதையை சர்வதேச பிரச்சினையுடன் தொடர்புபடுத்தி பேசியிருக்கும் இப்படம் ஹீரோயினிச காட்சிகளால் தடுமாறியிருக்கும். இருப்பினும் படத்தின் இரண்டாம் பாதி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இந்நிலையில், வரும் ஜனவரி 29-ம் தேதி நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS
SCROLL FOR NEXT ARTICLE