ஜெயம் ரவியின் ‘சைரன்’ ஏப்.19-ல் ஓடிடியில் ரிலீஸ்!

By செய்திப்பிரிவு

சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘சைரன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சைரன்’. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இறைவன்’ ஏமாற்றத்தைக் கொடுத்தது.

முன்னதாக வெளியான ‘அகிலன்’ படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்தச் சூழலில் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதன்படி படம் வரும் 19-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

5 mins ago

க்ரைம்

11 mins ago

தமிழகம்

37 secs ago

கல்வி

8 mins ago

உலகம்

19 mins ago

இணைப்பிதழ்கள்

33 mins ago

க்ரைம்

38 mins ago

க்ரைம்

45 mins ago

உலகம்

49 mins ago

தமிழகம்

1 hour ago

க்ரைம்

1 hour ago

வெற்றிக் கொடி

2 hours ago

மேலும்