சென்னை: ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘சைரன்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 19-ம் தேதி ஓடிடியில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அறிமுக இயக்குநர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கத்தில் ஜெயம் ரவி நடிப்பில் கடந்த பிப்ரவரி 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘சைரன்’. ‘பொன்னியின் செல்வன்’ படத்துக்குப் பிறகு ஜெயம் ரவி நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ‘இறைவன்’ ஏமாற்றத்தைக் கொடுத்தது.
முன்னதாக வெளியான ‘அகிலன்’ படமும் அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்தச் சூழலில் ஜெயம் ரவி நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் இப்படம் வெளியானது. கலவையான விமர்சனங்களைப் பெற்ற இப்படத்தில் கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன், சமுத்திரகனி, யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். ஹோம் மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ள இப்படம் தற்போது ஓடிடி வெளியீட்டுக்கு தயாராகியுள்ளது. அதன்படி படம் வரும் 19-ம் தேதி டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய செய்திகள்
தமிழகம்
5 mins ago
க்ரைம்
11 mins ago
தமிழகம்
37 secs ago
கல்வி
8 mins ago
உலகம்
19 mins ago
இணைப்பிதழ்கள்
33 mins ago
க்ரைம்
38 mins ago
க்ரைம்
45 mins ago
உலகம்
49 mins ago
தமிழகம்
1 hour ago
க்ரைம்
1 hour ago
வெற்றிக் கொடி
2 hours ago