கொலீஜிய அமைப்பு: குழப்பம் கூடாது!

By செய்திப்பிரிவு

கொலீஜிய அமைப்பு மீண்டும் விவாதத்துக்கு உள்ளாகியிருக்கிறது. கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசு காலம் தாழ்த்துவதாகக் கூறி உச்ச நீதிமன்றம், மத்திய அரசுக்குத் தன் கண்டனத்தைப் பதிவுசெய்துள்ளது. இப்போது நடைமுறையில் உள்ள இந்தக் கொலீஜிய அமைப்பு இந்திய அரசமைப்பில் இல்லை. மாறாக, சட்டக் கூறுகள் 124, 217 உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் நியமனம் குறித்தும் குடியரசுத் தலைவர் ஆலோசித்து நீதிபதிகளை நியமிக்கலாம் எனவும் கூறுகின்றன.

1970-களுக்குப் பிறகு நீதிபதிகள் நியமனத்தில் ஆளும் அரசுகள் சார்புநிலையை உருவாக்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது ஏற்கெனவே உள்ள நியமன முறையை விமர்சனத்துக்கும் உள்ளாக்கியது. 1981இல் ‘எஸ்.பி.குப்தா எதிர் இந்திய ஒன்றியம்’ வழக்கில் உச்ச நீதிமன்றம், உச்ச நீதிமன்ற நீதிபதி வழங்கும் ஆலோசனையை ஏற்கும், நிராகரிக்கும் உரிமை அரசுக்கு உள்ளதாகக் கூறியது; இது ‘முதலாம் நீதிபதி வழக்கு’ என அழைக்கப்படுகிறது. இந்திய ஒன்றியத்துக்கு எதிரான உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் வழக்கின் வழிதான் கொலீஜியம் முறை உருவானது; இது ‘இரண்டாம் நீதிபதி வழக்கு’ என அழைக்கப்படுகிறது. இது நீதிபதி நியமனத்தில் உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழு அரசுக்குப் பரிந்துரைக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

13 mins ago

இந்தியா

22 mins ago

தமிழகம்

53 mins ago

வணிகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

வாழ்வியல்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்