ஆணைய அறிக்கைகளுக்கு உரிய முக்கியத்துவம் தேவை!

By செய்திப்பிரிவு

மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருக்கிறதா என்று விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி ஆறுமுகசாமி ஆணையமும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகப் போராடியவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் உயிரிழந்தது தொடர்பாக விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையமும் அரசிடம் சமர்ப்பித்த இறுதி அறிக்கைகள் நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்டன.

அருணா ஜெகதீசன் ஆணையம் பரிந்துரைத்துள்ளபடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்ற தூத்துக்குடி மாவட்டத்தின் அன்றைய ஆட்சியர், வருவாய்த் துறை அதிகாரிகள், காவல் துறை உயரதிகாரிகள், ஆய்வாளர்கள், காவலர்கள் உள்ளிட்டோர் மீது துறைரீதியான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டிருப்பதாக சட்டப்பேரவையில் நடந்த விவாதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக்காரர்கள்மீது துப்பாக்கிச் சூடு நிகழ்த்தப்பட்டது குறித்து தொலைக்காட்சிச் செய்திகளின் மூலமாகவே தெரிந்துகொண்டதாக அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால், அன்றைய தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், காவல் துறை டி.ஐ.ஜி-யான டி.கே.ராஜேந்திரன் ஆகியோர் அளித்த சாட்சியங்களின் மூலமாக தூத்துக்குடி நிகழ்வுகள் அன்றைய முதல்வருக்கு உடனுக்குடன் தெரிவிக்கப்பட்டதை ஆணையம் உறுதிசெய்துள்ளது. இதை முன்வைத்து, எடப்பாடி பழனிசாமி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் சட்டப்பேரவைத் தலைவர் செல்வப்பெருந்தகை, மனிதநேய மக்கள் கட்சியின் எம்.ஹெச்.ஜவாஹிருல்லா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சிந்தனைச்செல்வன் உள்ளிட்டோர் வலியுறுத்தியுள்ளனர்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 hours ago

இந்தியா

3 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுச்சூழல்

4 hours ago

தமிழகம்

4 hours ago

சுற்றுலா

4 hours ago

வாழ்வியல்

4 hours ago

வாழ்வியல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

தமிழகம்

5 hours ago

சுற்றுச்சூழல்

5 hours ago

தமிழகம்

5 hours ago

மேலும்