தமிழ்நாட்டின் உதவிகள் இலங்கையுடனான நட்புறவை வளர்த்தெடுக்கட்டும்!

By செய்திப்பிரிவு

கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு மனிதாபிமான அடிப்படையில் தமிழ்நாடு அரசு செய்ய முன்வந்திருக்கும் உதவிகள் இருநாடுகளுக்கு இடையிலான உறவை மேலும் வளர்த்தெடுக்கும் வாய்ப்பினை உருவாக்கியுள்ளது. இலங்கை மக்களுக்கு ரூ.123 கோடி மதிப்பிலான பல்வேறு நிவாரணப் பொருட்களை வழங்குவதற்கு மத்திய அரசு அனுமதிக்க வேண்டி தமிழ்நாடு சட்டமன்றத்தில் ஏப்ரல் 29 அன்று ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது,

இருநாடுகளுக்கு இடையிலான நட்புறவுப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக என்றென்றும் நினைவுகூரப்படும். 40,000 டன் அரிசி, 100-க்கும் மேற்பட்ட உயிர் காக்கும் மருந்துப் பொருட்கள், குழந்தைகளுக்கு 500 டன் பால் பவுடர் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்த உதவிகள் அமையும். மத்திய - மாநில அரசுகளுக்கு இடையே அதிகாரங்கள் சார்ந்து அரசமைப்புரீதியில் கருத்து முரண்பாடுகள் நிலவிவரும் நிலையிலும், தமிழ்நாடு முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று, மத்திய அரசும் வெளியுறவுத் துறை அமைச்சகமும் இந்த நிவாரண உதவிகளுக்கு அனுமதியளித்திருப்பது வரவேற்கத்தக்க ஒன்று. மத்திய அரசு, ஜனவரி தொடங்கி இதுவரையில் மொத்தம் 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

விளையாட்டு

10 mins ago

தமிழகம்

2 mins ago

தமிழகம்

43 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

33 mins ago

க்ரைம்

1 hour ago

சுற்றுச்சூழல்

1 hour ago

இந்தியா

1 hour ago

சினிமா

1 hour ago

இந்தியா

2 hours ago

வர்த்தக உலகம்

2 hours ago

ஆன்மிகம்

1 hour ago

மேலும்