இருபாலர் வகுப்புகளுக்கு ஏன் இந்தத் தயக்கம்?

By செய்திப்பிரிவு

நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் கேள்வி நேரத்தின்போது பதிலளித்துப் பேசிய உயர் கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி, அரசுக் கல்லூரிகளில் பெண்களுக்குக் காலை வேளையிலும் ஆண்களுக்கு மாலை வேளையிலும் வகுப்புகள் நடத்துவது குறித்து ஆலோசித்துவருவதாகத் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. திராவிட இயக்கத்தின் மாணவர் தலைவராகப் பொதுவாழ்வில் நுழைந்தவர் உயர் கல்வித் துறை அமைச்சர். அவரும் சாதியக் கட்சி நிறுவனர்களின் குரலை எதிரொலிப்பதுபோல, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக வகுப்புகள் நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது, அவர் சார்ந்திருக்கும் இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைக்கே முரணாக அமைந்துள்ளது.

பள்ளி, கல்லூரி நாட்களிலிருந்தே பாலின சமத்துவம் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்று தொடர்ந்து பேசிவருகிறது திராவிட இயக்கம். அதற்கு மாறாக, இருபாலருக்கும் தனித்தனியாக வகுப்புகளை நடத்துவது ஆண்களும் பெண்களும் இயல்பாகப் பழகக்கூடிய, இணைந்து பணியாற்றக்கூடிய சூழலை மறுத்து, அவர்களுக்குள் நிரந்தர சமத்துவமின்மையை உருவாக்கிவிடக் கூடும். பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காகவே அவர்களுக்கு மட்டும் காலை வேளையில் தனியாக வகுப்புகள் நடத்தவிருப்பதாகக் காரணம் கூறப்படுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

35 mins ago

வலைஞர் பக்கம்

38 mins ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சினிமா

44 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்