டிசம்பர் 26, 2023 நள்ளிரவு, எண்ணூர் பெரியகுப்பத்தில் அமைந்துள்ள கோரமண்டல் உர உற்பத்தி ஆலைக்குச் செல்லும் அமோனியா வாயு கசிந்ததில், அப்பகுதிவாழ் மக்கள் பலருக்கும் மூச்சுத்திணறலும் கண் எரிச்சலும் ஏற்பட்டது அதிர்ச்சியளிக்கிறது. ஆலையிலிருந்து ஏற்பட்ட வாயுக் கசிவை உணர்ந்த வழிப்போக்கர்கள் சிலர்தான் பெரியகுப்பம், சின்னகுப்பம் பகுதி மக்களை எச்சரித்துள்ளனர். குழந்தைகள், முதியவர்கள் உள்பட அப்பகுதி மக்கள் உயிர் பயத்துடன் 2 கி.மீ. தொலைவு கடந்துசென்று பிழைத்துள்ளனர்.
சிலர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு சாலையிலேயே ரத்த வாந்தி எடுத்ததாகச் சொல்லப்படுகிறது. இந்த வாயுக் கசிவால் பாதிக்கப்பட்ட 45 பேர் தனியார் மருத்துவமனையிலும் 6 பேர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர். இந்த ஆலைக்குக் கப்பலிலிருந்து கடல் மார்க்கமாகக் குழாய்களில் அமோனியா எடுத்துச் செல்லப்படுவது வழக்கம். அப்படி எடுத்துச் செல்லப்படும் குழாயில் ஏற்பட்ட கசிவே இந்த விபத்துக்கான காரணமாக இருக்கலாம் எனத் தொடக்க விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
33 mins ago
சினிமா
4 mins ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
உலகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
வாழ்வியல்
2 hours ago