நாடாளுமன்றப் பாதுகாப்பு: விரிவான விவாதம் அவசியம்

By செய்திப்பிரிவு

டிசம்பர் 13 அன்று புதிய நாடாளுமன்றத்துக்குள் நிகழ்த்தப்பட்ட அத்துமீறல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 22 ஆண்டுகளுக்கு முன்னர் நாடாளுமன்ற வளாகத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலின் நினைவுதினம் அனுசரிக்கப்பட்ட சில மணி நேரத்தில், மக்களவைக்கு உள்ளேயும், நாடாளுமன்ற வளாகத்திலும் புகுந்து சிலர் நிகழ்த்திய இந்தச் சம்பவம் ஒட்டுமொத்த தேசத்தையும் அதிரவைத்திருக்கிறது. அதேவேளையில், இந்த விவகாரத்தை முன்வைத்து அரசும் எதிர்க்கட்சிகளும் மோதிக்கொள்வதால் நாடாளுமன்றம் முடக்கத்துக்குள்ளாவது விரும்பத்தக்கது அல்ல. டிசம்பர் 13 அன்று மதியம் 1 மணியளவில், மக்களவையின் பார்வையாளர் பகுதியிலிருந்து குதித்த ஒருவர், மேஜைகள்மீது தாவி ஓடியபடி, தன் காலணியில் மறைத்துவைத்திருந்த, மஞ்சள் நிறப் புகையைப் பரப்பும் கருவியை எடுத்து இயக்கினார். இன்னொரு நபரும் அவைத் தலைவரின் இருக்கைக்கு அருகில் சென்று இதே போன்ற செயலைச் செய்தார்.

நீலம் ஆசாத் என்னும் பெண் உள்ளிட்ட இருவர் நாடாளுமன்ற வளாகத்திலும் அதே பாணியில் மஞ்சள் நிறப் புகையைப் பரவச் செய்து முழக்கங்கள் எழுப்பினர். இந்தச் சம்பவம் நாடாளுமன்றத்தின் பாதுகாப்பு தொடர்பானது என்பதால் பெரும் அரசியல் சர்ச்சை வெடித்திருக்கிறது. இந்திரா காந்தி படுகொலை சம்பவத்துக்குப் பின்னர்தான் நாடாளுமன்ற வளாகத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டன. 2001 டிசம்பர் 13இல் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்புகள் நடத்திய பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பின்னர், பல அடுக்குப் பாதுகாப்பு நடைமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. பார்வையாளருக்கான நுழைவுச்சீட்டு பெறுவதிலும் உரிய கட்டுப்பாடுகள் இருக்கவே செய்கின்றன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

இந்தியா

10 mins ago

இந்தியா

14 mins ago

இந்தியா

30 mins ago

தமிழகம்

58 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்