மராத்தாக்கள் இடஒதுக்கீடு: வறுமைக்குத் தீர்வாகுமா?

By செய்திப்பிரிவு

சட்ட விதிமுறைகளின்படி பிற்படுத்தப்பட்ட சமூகமாக வகைப்படுத்தப்படாவிட்டாலும், வட இந்தியாவில் அரசியல்ரீதியாகச் செல்வாக்கு மிகுந்த சமூகங்கள், தங்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று கோரிவருகின்றன. மகாராஷ்டிரத்தில் மராத்தாசமூகத்தவருக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்று நடத்தப்படும் போராட்டங்களும் அத்தகையவைதான். அரசியல் அதிகாரத்தைப் பொறுத்தவரை, மகாராஷ்டிரத்தில் 1967இலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 35% பேர் மராத்தா சமூகத்தைச் சேர்ந்தவர்கள். சுதந்திர இந்தியாவில் மகாராஷ்டிரத்தின் முதலமைச்சரான 18 பேரில், 12 பேர் மராத்தாக்கள். பொருளாதாரரீதியிலும் மராத்தாக்களின் ஆதிக்கம் குறைந்துவிடவில்லை.

குறிப்பாக, கிராமப்புற மகாராஷ்டிரத்தில் முக்கால்வாசி விவசாய நிலங்கள் மராத்தாக்கள் வசமே உள்ளன. 2011-12 இந்திய மனித வளர்ச்சிக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி, தனிநபர் செலவினத்தைப் பொறுத்தவரை பிராமணர்கள் மட்டுமே மராத்தாக்களை முந்தியிருக்கின்றனர். மராத்தாக்களிடையே நிலவும் வறுமை, பிற முற்பட்ட சமூகத்தினருடன் மட்டுமே ஒப்பிடத்தக்கது. பட்டியல் சாதி, பட்டியல் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்புகள் அனைத்தையும்விட மராத்தாக்களிடையே நிலவும் வறுமை குறைவானது. சமூகரீதியிலும் கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்னும் பிரிவுக்குக் கீழ் மராத்தாக்களுக்கு 2018இல் வழங்கப்பட்ட 16% இடஒதுக்கீட்டை உச்ச நீதிமன்றம் 2021இல் ரத்து செய்ததற்கான காரணத்தை இவற்றிலிருந்தே தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

வேலை வாய்ப்பு

11 mins ago

தமிழகம்

50 mins ago

இந்தியா

59 mins ago

தமிழகம்

44 mins ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இணைப்பிதழ்கள்

8 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்