வியாசர் இயற்றிய மகாபாரதம் ஒரு மாபெரும் இதிகாசப் பிரதி. நவீன இலக்கியத்திற்கு இன்றுவரை கதைகளைக் கையளித்துக் கொண்டிருக்கும் சுரங்கம். பல்வேறு முரண்பாடுகளும் விடுபடல்களும் இடைச்செருகல்களும் கொண்ட அப்பிரதியே இந்திய மரபின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. வியாசர் மகாபாரதத்தை எழுதி முடித்தபோது தற்போதைய வடிவத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மேலும் வியாசர் அதற்கு ‘ஜெய’ என்றே பெயர் சூட்டியிருக்கிறார். சூதர்கள் எனப்படும் புராணப் பிரசங்கிகள்தாம் வியாசரின் ‘ஜெய’த்தை மகாபாரதமாக வளர்த்தெடுத்தார்கள். அவர்கள்தாம் பரத வம்சக் கதையை மக்களிடம் கொண்டு சேர்த்தவர்கள்; அந்தப் பிரதியின் மீது கவனத்தை உருவாக்கியவர்கள். அப்படியொரு பிரசங்கி மரபில் வந்தவர்தான் ‘மகாபாரத வசன காவிய’த்தை உருவாக்கிய சண்முகக் கவிராயர்.
மகாபாரத வசன காவியம், பதினெட்டாம் நூற்றாண்டில் வாழ்ந்த நல்லாப்பிள்ளையால் இயற்றப்பட்ட பாரதத்தை அடியொற்றி எழுதப்பட்டது. நல்லாப்பிள்ளை, வியாசரைப் பின்பற்றிப் பதினெட்டுப் பருவங்களில் மகாபாரதக் கதையைச் செய்யுளில் பாடியிருக்கிறார். ஆனால், இதன் அச்சுப்பதிப்பு 1888இல் முழுமையாக வெளிவந்திருக்கிறது. சண்முகக் கவிராயர், நல்லாப்பிள்ளையின் சுவடியைப் பயன்படுத்தி, நுட்பமாக ஆராய்ந்து 1860இல் மகாபாரத வசன காவியத்தை அச்சில் வெளியிட்டிருக்கிறார். 1860 - 1969 இடைப்பட்ட காலங்களில் இந்நூல் இருபது பதிப்புகளைக் கண்டிருக்கிறது. மூல நூலுக்கு முன்பே வசன காவியம் அச்சில் வெளிவந்திருப்பதைக் கவனிக்க வேண்டும். மகாபாரத பிரசங்கியான சண்முகக் கவிராயர், பாரதத்தைப் பொதுமக்களிடம் எளிமையாகக் கொண்டுசெல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை இயற்றியிருக்கிறார்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
5 mins ago
இந்தியா
23 mins ago
இந்தியா
15 mins ago
கருத்துப் பேழை
58 mins ago
க்ரைம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
வாழ்வியல்
2 hours ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
3 hours ago
உலகம்
3 hours ago
தமிழகம்
3 hours ago