மாற்றங்களின் வேறுபட்ட பாதைகளில் பயணித்துச் செல்லும் இந்திய சினிமாவின் தடங்களில் முக்கியமான திசைகளைக் காட்டியவை கே.விஸ்வநாத்தின் படங்கள். இவர் தீவிர சினிமா ஆள் இல்லை; வியாபார வெற்றிக்கான வரையறை கொண்ட இயக்குநரும் அல்ல. சிற்சில சறுக்கல்களைக் கழித்துவிட்டுப் பார்த்தால், பழைமை கலந்த தென்னிந்தியக் கிராமங்களின் வாழ்க்கையைக் காட்சிப் படிமங்களாக்கித் தந்தவர். தரமான படங்களைத் தந்தவர் என்ற நல்ல பெயரோடு 92 வயதில் ஒரு கலைஞனின் மறைவு என்பது நீண்ட நெடிய கலைப் பயணத்தின் இளைப்பாறல் என்றுதான் கொள்ள வேண்டும்.
தமிழைப் பொறுத்தவரை ‘சலங்கை ஒலி’, ‘சிப்பிக்குள் முத்து’, ‘பாசவலை’ போன்ற கமல் ஹாசன் படங்கள் வழிதான் கே.விஸ்வநாத் நமக்கு நன்கு அறியப்படத் தொடங்கினார். ஆனால், ‘சங்கராபரணம்’ படம் வழி அதற்கு முன்பே இந்திய அளவில் அவர் பிரபலமாகியிருந்தார். ‘இசைக்கு ஒரு கோவில்’ (‘சுருதி லயலு’) உள்ளிட்ட அவரது வேறுவேறு படங்கள் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருந்தாலும் கமல் நடிப்பில் வந்த படங்களைத் தவிர, மற்ற மொழிமாற்றப் படங்கள் போதிய கவனம் பெறவில்லை.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
சினிமா
54 mins ago
இந்தியா
24 mins ago
தமிழகம்
58 mins ago
தமிழகம்
1 hour ago
வாழ்வியல்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
ஓடிடி களம்
2 hours ago
விளையாட்டு
2 hours ago
கல்வி
3 hours ago
உலகம்
4 hours ago