மகாத்மா காந்தி தனது வாழ்நாளில், அகில இந்திய வானொலி நிலையத்துக்கு ஒரே ஒருமுறைதான் சென்றுள்ளார். வெவ்வேறு இடங்களில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அவரது உரைகளைப் பல்வேறு சந்தர்ப்பங்களில், அகில இந்திய வானொலி ஒலிபரப்பினாலும், நேரடியாக அவர் வானொலி நிலையத்துக்கு வந்தது ஒருமுறைதான்; அதுவும் மக்களுக்காக. வானொலி எனும் ஊடகத்தை அற்புதமான சக்தியாக காந்தி பார்த்தார். “துன்பத்தில் இருக்கும் என் சகோதர, சகோதரிகளே! நீங்கள் மட்டும் கேட்கிறீர்களா அல்லது வேறு சிலரும் இந்த வானொலி ஒலிபரப்பினைக் கேட்டுக்கொண்டு இருக்கிறீர்களா என்று எனக்குத் தெரியவில்லை…” என 1947 நவம்பர் 12 அன்று டெல்லி வானொலி நிலையத்திலிருந்து அவர் ஆற்றிய உரையின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 12 அன்று ‘பொதுச் சேவை ஒலிபரப்பு நா’ளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
அன்றும் இன்றும் துன்பத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்லும் முதல் ஊடகமாக வானொலியே இருக்கிறது. ஈழப் போரின்போது தமிழ் மக்களுக்குக் களநிலவரங்களை எடுத்துச்சொன்னது வானொலியே; பிலிப்பைன்சிலின் வேரித்தாஸ் வானொலி, பிபிசி தமிழோசை ஆகியவற்றை மறக்க முடியாது. இன்று, உக்ரைன் போரில் நவீனத் தகவல்தொடர்புச் சாதனங்கள் முடங்கிவிட்ட நிலையில், மக்களைச் சென்றடையும் ஒரே ஊடகமாக வானொலி, தொலைதூர நாடுகளுக்கு ஒலிபரப்ப வழிசெய்யும் சிற்றலை (Short Wave) மூலம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய நாடுகள் சிற்றலை ஒலிபரப்பில் இருந்து டிஜிட்டல், பண்பலை ஒலிபரப்புக்கு மாறிவிட்டன.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
12 mins ago
ஆன்மிகம்
30 mins ago
தமிழகம்
50 mins ago
தமிழகம்
5 hours ago
இந்தியா
1 hour ago
கருத்துப் பேழை
1 hour ago
தமிழகம்
1 hour ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
3 hours ago
சினிமா
3 hours ago
சினிமா
7 hours ago