சாதிச் சான்றிதழ்கள்: களையப்பட வேண்டிய சிக்கல்கள்!

By செய்திப்பிரிவு

காஞ்சிபுரம் மாவட்டம் சிறுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் அக்டோபர் 11 அன்று சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்தார். தன் பிள்ளைகளுக்குப் பழங்குடியின சாதிச் சான்றிதழ் கோரி விண்ணப்பித்திருந்த நிலையில், மனு நிராகரிக்கப்படவே வேல்முருகன் இந்த முடிவை எடுத்திருக்கிறார். சிகிச்சை பலனின்றி மறுநாள் வேல்முருகன் இறந்துவிட, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப் பதிவுசெய்தது.

விசாரணையின்போது இது குறித்து விளக்கமளித்த காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர், பட்டியலினத்தைச் சேர்ந்த வேல்முருகன் தன் பிள்ளைகளுக்குப் பழங்குடியின சாதிச் சான்றிதழ் கேட்டதாகத் தெரிவித்திருந்தார்; சான்றிதழுக்காக வேல்முருகன் சமர்ப்பித்திருந்த ஆவணத்திலும் தவறு இருந்ததால் அவரது மனு நிராகரிக்கப்பட்டது என்றார். குறவர், நரிக்குறவர் ஆகிய இரண்டு பிரிவுக்கும் சாதிச் சான்றிதழ் வழங்குவதில் பல காலமாகப் பிரச்சினை இருந்துவருகிறது. நரிக்குறவர்கள் வெளிமாநிலங்களிலிருந்து குடிபெயர்ந்த நாடோடிகள், தாங்களே இம்மண்ணின் மைந்தர்கள் என்று குறவர்கள் கூறிவருகின்றனர். தமிழ்நாட்டில் பூர்விகமாக வாழ்ந்துவரும் குறவர்களைப் பழங்குடியினர் (எஸ்.டி.,) வகுப்பில் சேர்க்காமல், பட்டியலின (எஸ்.சி.,) வகுப்பில் சேர்த்திருப்பது குறித்த வாதமும் தொடர்கதையாக இருக்கிறது. இருளர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் சாதிச் சான்றிதழ் பெறுவதிலும் பெரும் தடை நிலவுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

விளையாட்டு

6 hours ago

இந்தியா

8 hours ago

வணிகம்

8 hours ago

விளையாட்டு

9 hours ago

இணைப்பிதழ்கள்

9 hours ago

க்ரைம்

9 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

தமிழகம்

11 hours ago

மேலும்