யுவ புரஸ்கார்: அளித்தலும் பெறுதலும்

By சுப்பிரமணி இரமேஷ்

இந்த ஆண்டுக்கான யுவபுரஸ்கார் விருது, ப.காளிமுத்து எழுதியுள்ள ‘தனித்திருக்கும் அரளிகளின் மதியம்’ என்ற கவிதைத் தொகுப்பிற்காக அறிவிக்கப்பட்டுள்ளது. சாகித்ய அகாடமி வழங்கும் விருதுகளில் யுவபுரஸ்கார் விருதுக்கு மட்டுமே அறிவிப்பின் மூலம் படைப்பாளர்களிடமிருந்து நூல்களைப் பெற்று விருதுக்குப் பரிசீலிக்கப்படுகிறது. பரிசீலனைக்கு எத்தனை நூல்கள் வந்தன, அந்த நூல்களில் இருந்து குறும்பட்டியலை யார் தயார் செய்தார்கள் என்பது போன்ற தகவல்கள் இல்லை.

ஆனால், சாகித்ய அகாடமியின் ஆலோசனைக்குழு உறுப்பினர்களுக்கும் அதன் தலைவருக்கும் நூல்களைத் தேர்ந்தெடுப்பதிலும் மூன்று நடுவர்களை நியமிப்பதற்கும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. குறும்பட்டியலில் இருந்து மூன்று நடுவர்கள் பரிந்துரைக்கும் தலா இரண்டு நூல்களில் இருந்தே ஒரு நூல் விருதுக்குரிய தகுதியைப் பெறுகிறது. சாகித்ய அகாடமி விருது அறிவிப்புகள் பல முறை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கின்றன. இந்த விருது அறிவிப்பு குறித்தும் தீவிரமாகவே சமூக ஊடகங்களில் பேசப்படுகிறது. தாய்மொழிக்கும் இலக்கியத்திற்கும் சிறந்த பங்களிப்பைச் செய்திருக்கும் படைப்பிற்கே இவ்விருது வழங்கப்பட வேண்டும் என்று சாகித்ய அகாடமியின் விதியை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டியுள்ளது. பரிந்துரைப் பட்டியலிலுள்ள படைப்பாளிகள் பலரது நூல்களை ஏற்கெனவே வாசித்திருக்கிறேன். அதில் பலர் நம்பிக்கையளிக்கும் இளம் படைப்பாளர்கள்; தொடர்ச்சியாக இயங்கிவருபவர்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

10 mins ago

தமிழகம்

22 mins ago

தமிழகம்

57 mins ago

விளையாட்டு

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

இந்தியா

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

சுற்றுச்சூழல்

2 hours ago

வணிகம்

1 hour ago

இந்தியா

2 hours ago

க்ரைம்

1 hour ago

மேலும்