கற்றல் இழப்புக்கு எதிராகப் போராடுவோம்!

By செய்திப்பிரிவு

கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் கல்வி தொடர்பாகப் பெரிதும் பேசப்பட்ட வார்த்தைகள் இவை: கற்றல் இழப்பு, கற்றல் இடைவெளி. இந்த இரண்டாண்டுகளில் கற்றல் இழப்பு குறித்துப் பெரிய அளவில் விவாதிக்கப்பட்டதற்குக் காரணம், அனைத்துத் தரப்பினரின் குழந்தைகளும் பாதிக்கப்பட்டதால்தான். அதிகாரம், செல்வாக்கு உடையவர்களின் குழந்தைகளும் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில் முதல்வரின் தனிப் பிரிவுக்கு ஆசிரியர் கூட்டணியின் தீனன் உள்ளிட்ட சிலர் மனு கொடுத்திருந்தனர். மதுரை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் செயல்படும் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் கடந்த பத்தாண்டுகளாக ஓராசிரியர் பள்ளிகளாக இயங்கிவருகின்றன. அந்தப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் உடனடியாக நிரப்ப வேண்டும் என்பது அவர்களின் கோரிக்கை. அதற்கு சம்பந்தப்பட்ட நிர்வாகம் கொடுத்துள்ள ஒப்புதல் வாக்குமூலம் இது: “மொத்தமுள்ள 76 இடங்களில் 12 இடங்கள் சமீபத்தில் நிரப்பப்பட்டுள்ளன. மீதமுள்ள இடங்கள் விரைவில் நிரப்பப்படும்.” ஆக, கல்வி உரிமைச் சட்டம் மிகத் தீவிரமாக அமல்படுத்தப்பட்ட இந்தப் பத்தாண்டு காலமும் தொடர்ந்து நிலவிவந்த அவலம் இன்னும் முடியவில்லை. 50-க்கும் மேற்பட்ட இந்தப் பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகளுக்கு எந்த அளவுக்குக் கற்றல் இழப்பு ஏற்பட்டிருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

52 mins ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

6 hours ago

விளையாட்டு

7 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

9 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்