தேவை கலப்பில்லாப் பொதுப் பேச்சுத் தமிழ்

By செய்திப்பிரிவு

தமிழ்நாடு முதலமைச்சர் ‘சமபந்தி போஜனம்’ என்பது இனி ‘சமத்துவ விருந்து’ என அழைக்கப்படும் என்று 13.04.2022 அன்று அறிவித்திருப்பது நல்ல தமிழை விரும்பும் அனைவராலும் வரவேற்கப்பட்டுள்ளது. இவ்வேளையில், எழுத்துத் தமிழிலும் பேச்சுத் தமிழிலும் வரம்பின்றி ஆங்கிலக் கலப்பு பெருகிவருவது தமிழ் மீது அக்கறை உள்ள அனைவராலும் கவலையோடு பார்க்கப்படுகிறது. அறிஞர்களும் தமிழ் நலம் விரும்பிகளும் பல அரசியல் தலைவர்களும்  தமிழ் மொழிப் பயன்பாடு ஆங்கிலக் கலப்பின்றி இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள், வலியுறுத்துகிறார்கள்.

பிறமொழிச் சொற்களைப் பயன்படுத்துவதில் கடைப்பிடிக்க வேண்டிய எச்சரிக்கை உணர்வு தொல்காப்பியர் காலத்திலேயே ஆழமாக வேர் விட்டிருந்தது. வடமொழிச் சொற்களைத் தமிழ்க் கவிதையில் பயன்படுத்தும்போது, தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றிப் பயன்படுத்த வேண்டும் என்று விதி வகுத்த தொல்காப்பியரின் வழிகாட்டல், தமிழ் இலக்கிய இலக்கண மரபின் நெடுகிலும் பின்பற்றப்பட்டிருப்பதைக்  காண முடியும். பிறமொழித் தொடர்புகளாலும் சமூக, அரசியல் காரணங்களாலும் பல்வேறு காலகட்டங்களில் பிறமொழிச் சொற்கள், குறிப்பாக சம்ஸ்கிருதத்திலிருந்து, கடன் வாங்கப்பட்டுள்ளன. பிறமொழிச் சொற்கள் கலந்து தமிழ் பேசப்பட்டு வந்துள்ளது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

கருத்துப் பேழை

3 hours ago

தமிழகம்

1 hour ago

ஜோதிடம்

4 hours ago

ஜோதிடம்

4 hours ago

விளையாட்டு

9 hours ago

தமிழகம்

9 hours ago

தமிழகம்

10 hours ago

விளையாட்டு

11 hours ago

இந்தியா

12 hours ago

விளையாட்டு

13 hours ago

இந்தியா

14 hours ago

தமிழகம்

14 hours ago

மேலும்