சிறப்புக் கட்டுரைகள்

எஸ்​.எல்​.பைரப்பா: கன்னடத்தில் எழுதிய இந்திய எழுத்தாளர்

பாவண்ணன்

தில்​லியைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு இயங்​கும் நேஷனல் புக் டிரஸ்ட் நிறு​வனம் கடந்த நூற்​றாண்​டின் எண்​பதுகளில் ‘ஆதான் பிர​தான்’ என்​னும் திட்​டத்​தின் கீழ் இந்​திய மொழிகளில் எழுதப்​பட்ட நாவல்​களில் தலைசிறந்​த​தாக விளங்​கிய செவ்​வியல் நாவல்​களைப் பிற மொழிகளில் மொழிபெயர்த்து வெளி​யிட்​டது. அவ்​வகை​யில் பத்​துக்​கும் மேற்​பட்ட பிறமொழி நாவல்​கள் தமிழில் வெளிவந்​தன. 1987இல் எச்​.​வி.சுப்​பிரமணி​யன் என்​பவரின் மொழிபெயர்ப்​பில் வெளிவந்த ‘ஒரு குடும்​பம் சிதைகிறது’ என்​னும் நாவலும் அவற்​றில் ஒன்​று.அதன் மூல ஆசிரியர் கன்னட மொழி​யின் தலைசிறந்த எழுத்​தாள​ரான எஸ்​.எல்​.பைரப்​பா. தமிழ்ச்​சூழலில் அவருடைய அறி​முகம் அப்​போது​தான் தொடங்​கியது.

அந்த நாவலில் இடம்​பெற்​றிருக்​கும் கதை​மாந்​தர்​கள் மிகமிக எளிய​வர்​கள். ஆனால் சிக்​கலான மனப்​போக்கை உடைய​வர்​கள். எல்​லாம் எனக்​குத் தெரி​யும் என்​கிற மனப்​போக்கு கொண்​ட​வர்​கள் சிலர். ஒரு வேலை​​யும் செய்​யாமல், வேளாவேளைக்கு சாப்​பாடுத்தன்​னைத்தேடி வரவேண்​டும் என்​கிற மனப்​போக்கு கொண்​ட​வர்​கள் வேறு சிலர். எப்​போதும் பிறரை ஏமாற்​றி​யும் வஞ்​சித்​தும் பிழைக்​கிற மனப்​போக்கு கொண்​ட​வர்​கள் இன்னும் சிலர். இப்​படிப்​பட்​ட​வர்​களே தாயாக​வும் பிள்​ளை​களாக​வும் உறவினர்​களாக​வும், ஒரே குடும்​பத்​தில் நிறைந்​திருக்​கிற சூழலைத்​தான் தன் நாவலில் காட்​சிப்​படுத்​தி​யிருக்​கிறார் பைரப்​பா. அவர்​களைத் தம் அன்​பாலும் கருணை​யாலும் கண்​டிப்​பாலும் நேர்ப்​படுத்தி வாழ்க்​கை​யில் முன்​னேறலாம் என்​கிற மனப்​போக்​குடன் மரு​மகளாக வரு​கிறாள் ஒருத்​தி.

இருப​தாண்​டு​களுக்​கும் மேலாக அவள் முன்​னெடுக்​கும் எல்லா முயற்​சிகளும் இறு​தி​யில் தோல்​வி​யில் முடிவடைகின்​றன. கடைசிக்​கட்​ட​மாக நாட்​டையே நிலைகுலைய வைத்த பிளேக் நோய்க்கு அந்​தக் கிராமம் நிலைகுலை​யும்​போது அக்​குடும்​ப​மும் சிதைந்​து​விடு​கிறது. திருமண வயது​வரை பாடு​பட்டு வளர்த்த பிள்​ளை​களைப் பறி​கொடுத்​து​விட்டு கையறு நிலை​யில் நிற்​கிறாள் மரு​மகள்.

அந்த நாவலின் முதல் காட்​சியை ஒரு படிம​மாகத் தோன்​றும் வகை​யில் சித்​தரித்​திருக்​கிறார் பைரப்​பா. அக்​காட்​சி​யில் தன் வீட்​டுக்​கூரை​யின் மீது ஏறி ஒவ்​வொரு ஓடாகப் பிடுங்கி வீசி​யெறிந்து விளை​யாடு​கிறார்​கள் அக்​குடும்​பத்​தின் பிள்​ளை​கள். அதைப் பார்க்​கும் அவர்​களு​டைய வித​வைத்​தாய் கண்​டிப்​ப​தற்கு மாறாக “உங்க கை அழுகிப் போக. உங்க வீடு பாழாய்ப் போக. உங்க குடும்​பம் குட்​டிச்​சுவ​ராப் போக” என்று சபிக்​கிறாள். வாயைத் திறந்​தாலே சாபமொழியைத் தவிர வேறு எதை​யும் பேசத் தெரி​யாத அளவுக்​குப் பண்​பாடற்​றவளாகவே அவள் அக்​குடும்​பத்​தில் வலம்​வரு​கிறாள். இறு​தி​யில் அவள் சாபம் அவளு​டைய குடும்​பத்​தையே சிதைக்​கிறது.

ஒரு​புறம் தியாகத்​தின் வடி​வாக நிற்​கும் மரு​மகள். மறு​புறம் அற்​பத்​தனத்​தின் வடி​வாக நிற்​கும் மாமி​யார். பைரப்​பா​வின் ‘ஒரு குடும்​பம் சிதைகிறது’ இன்​றள​வும் தமிழ் வாசகர்​களால் மட்​டுமன்​றி, மொழி​யாக்​கம் வழி​யாக வாசித்த எல்லா இந்​திய மொழி இலக்​கிய வாசகர்​களும் விரும்பி வாசிக்​கும் படைப்​பாக விளங்​கு​கிறது.

பைரப்பா எழு​திய ‘பரு​வம்’ நாவல் 2002ஆம் ஆண்​டில் தமிழில் வெளிவந்​தது. இந்​நாவல் மகா​பாரதக் கதையை ஓர் எதார்த்த நாவலுக்​குரிய அமைப்​பில் மீட்​டுரு​வாக்​கம் செய்த படைப்​பாகும். குரு ஷேத்​திரப் போரின் தொடக்​கத்​திலிருந்து தொடங்​கும் நாவலின் ஒவ்​வொரு அத்​தி​யாய​மும் மகா​பாரதக்​ கதை​யில் இடம்​பெற்​றிருக்​கும் ஒவ்​வொரு பெண் பாத்​திரத்​தின் நினை​வோடைக்​ காட்​சி​யாக விரிவடைகிறது. ஒரு போர் ஒவ்​வொரு​வருடைய பார்​வை​யிலும் வெவ்​வேறு விதங்​களில் எப்​படிப் பொருள்​படு​கிறது என்​பதை ஓர் உளவியல் ஆய்​வாளனைப்​போலச் சித்​தரித்​திருக்​கிறார் பைரப்​பா. போர் அழி​வைத் தவிர வேறெதை​யும் உரு​வாக்​கு​வ​தில்லை என்​னும் எளிய உண்​மையை கடுமை​யான அழி​வுக்​குப் பின் உலகம் புரிந்​து​கொள்​கிறது.

2024ஆம் ஆண்​டில் வெளிவந்த பைரப்​பா​வின் ‘வம்​ச​ விருட்​சம்’ மற்​றொரு முக்​கிய நாவல். மாற்​றத்​துக்கு இடம் கொடுக்​காத நெறிக்​கும், மாற்​றத்​தின் வழி​யாக வாழ்​வின் வசந்​தத்தை நாடிச் செல்ல விரும்​பும் எண்​ணத்​துக்​கும் இடையி​லான முரணின் விளைவு​கள்​தான் இந்​நாவலின் களம். நம் தோட்​டத்து விருட்​சம் நம் விருப்​பத்​துக்​குக் கட்​டுப்​பட்டு வளர்​வதையே நெறி என தொடக்​கத்​தில் எண்​ணும் மனம், ஒரு விருட்​சத்​தின் கிளை​களோ வேர்​களோ தம் போக்​கில் தாமே சுதந்​திர​மாகப் பரந்து விரிந்து தன்​னைத்​தானே நிலைநிறுத்​திக்​கொள்​ளும் பேராற்​றல் கொண்​டவை என்​னும் உண்​மையை வாழ்​வின் இறு​திக்​கட்​டத்​தில் கண்​டடைகிறது.

பைரப்​பா​வின் ஒவ்​வொரு நாவலும் பல பதிப்​பு​கள் கண்​ட​வை. பல்​லா​யிரக்​கணக்​கான வாசகர்​களைச் சென்று சேர்ந்​தவை. கன்​னடத்​தில் எழு​திய இந்​திய எழுத்​தாளர் அவர். கடந்த 24-09-2025 அன்று தன் 94வது வயதில் அவர் இயற்​கையோடு கலந்​து​விட்​டார். ஆயினும் இலக்​கிய வாசகர்​களின்​ நெஞ்​சில்​ அவர்​ என்​றென்​றும்​ நிலைத்​திருப்​பார்​.

SCROLL FOR NEXT