சிறப்புக் கட்டுரைகள்

மொழிபெயர்ப்பு முன்னோடி: சரஸ்வதி ராம்நாத்

பாவண்ணன்

1986இல் சென்னை திருவல்லிக்கேணியில் பாதையோரப் பழையப் புத்தகக் கடை ஒன்றிலிருந்து சில புத்தகங்களை வாங்கினேன். அவற்றில் ஒன்று ‘ஜெய சோம்நாத்’ என்ற குஜராத்தி நாவல். இது, இந்தி வழியாக தமிழில் மொழிபெயர்க்கப்பட்டிருந்தது.

கே.எம்​.​முன்ஷி என்​னும் பெயரை அட்​டை​யில் பார்த்​து​விட்​டுத்​தான் அப்​புத்​தகத்தை வாங்​கினேன். ஜெய சோம்​நாத் நாவலை ஆர்​வ​முடன் ஒரே நாளில் படித்து முடித்​தேன். ஒரு​புறம் கஜினி முகம்​மது​வின் படையெடுப்​பி​னால் சோம​நாத் நகரம் அழி​வுக்​குள்​ளாகிறது. இன்​னொரு​புறம் கோயிலில் நடன​மாடு​வதற்​காக வந்த செளலா என்​னும் நடனக்​காரிக்​கும் அந்த ஊரைச் சேர்ந்த பீம்​தேவ் என்​னும் வீரனுக்​கும் இடை​யில் அரும்​பிய காதலும் அழிந்​து​போகிறது. இரு​வித அழி​வு​களை அரு​கரு​கில் நிறுத்தி இணைத்த நாவலின் கட்​டமைப்பு என்னை மிக​வும் கவர்ந்​தது. ஒரு தமிழ் நாவலைப் படிப்​பது​போலவே நான் அந்த மொழிபெயர்ப்பு நாவலை அன்று படித்து முடித்​தேன். அந்த மொழிபெயர்ப்​பாளரின் பெயர் என் மன​திலேயே நின்​று​விட்​டது. அவர் சரஸ்​வதி ராம்​நாத்.

இரண்டு ஆண்​டு​கள் கழித்து நான் முற்​றி​லும் எதிர்​பா​ராத வித​மாக அவரிட​மிருந்து எனக்​கொரு மடல் வந்​த​போது மெய்​சிலிர்த்து விட்​டேன். என்​னுடைய ‘முள்’ என்​னும் சிறுகதையை இந்​தி​யில் மொழிபெயர்ப்​ப​தற்​காக அனு​மதி வேண்டி அவர் அக்​கடிதத்தை எழு​தி​யிருந்​தார். நான் அன்றே என் அனு​ம​தி​யைத் தெரி​வித்து அவருக்கு எழு​திய கடிதத்​தில், ஜெய சோம​நாத் வாசித்த அனுபவத்​தைப் பற்​றி​யும் குறிப்​பிட்​டிருந்​தேன். சரஸ்​வதி ராம்​நாத்​துடன் எனக்கு இப்​படித்​தான் தொடர்பு தொடங்​கியது.

சரஸ்​வதி ராம்​நாத்​தின் சொந்த ஊர் தாராபுரம். காந்​தி​ய​வா​தி​யான அவருடைய தந்தை அளித்த ஊக்​கத்​தால் இந்தி மொழியைக் கற்​றார். திரு​மணத்​துக்​குப் பிறகு சென்னை வாழ்க்​கைத் தொடங்​கியது. தொடக்​கத்​தில் அவர் சிறுகதை​யாசிரிய​ராக விரும்பி, பல சிறுகதைகளை எழு​தி​னார்.

ஒரு​முறை ‘தினமணி கதிர்’ ஆசிரிய​ராக இருந்த துமிலன், அவரிடம் மொழிபெயர்க்​கும் ஆவலைத் தூண்​டி​னார். அவரே சில மொழிபெயர்ப்​புக் கதைகளை வெளி​யிட​வும் உதவி செய்​தார். இந்தி மொழி​யில் வந்த படைப்​பு​களை மட்​டுமின்​றி, குஜ​ராத்​தி, மராத்​தி, அசாமி, வங்​கம் என பிற மொழிகளி​லிருந்து இந்​தியை வந்​தடைந்த படைப்​பு​களை​யும் தமிழுக்கு அறி​முகப்​படுத்​தத் தொடங்​கி​னார். அந்த வேகம் அவரை மொழிபெயர்ப்​பின் திசை​யில் வெகுதொலைவு இழுத்​துச் சென்​று​விட்​டது.

சரஸ்​வதி ராம்​நாத்​தின் மகன் பெங்​களூர் நிமான்ஸ் மருத்​து​வ​மனை​யில் மனநல மருத்​து​வ​ராகப் பணிபுரிந்​தார். அதனால் இருப​தாண்​டு​களுக்​கும் மேலாக வாழ்ந்த சென்​னையி​லிருந்து பெங்​களூருவுக்கு இடம்​பெயர்ந்​தார். பெங்​களூருவில் குடியேறிய​போதும், என்​றென்​றும் மொழிபெயர்ப்​பிலேயே மூழ்​கி​யிருந்​தார்.

சில ஆண்​டு​களுக்​குப் பிறகு எனக்​கும் பெங்​களூருவில் குடி​யிருக்க வாய்ப்பு அமைந்​த​போது, அவரைத் தேடிச் சென்று சந்​தித்து அவருடைய நட்​பைப் பெற்​றேன். அப்​போது அவருடைய புத்​தகச் சேமிப்​பிலிருந்து பல புத்​தகங்​களை எடுத்​துச்சென்று படிப்​ப​தற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்​தது. அவர் மொழிபெயர்த்து வெளிவந்து வெளிச்​சந்​தை​யில் கிடைக்​காமல் இருந்த ராஜநர்த்​தகி, தேவ​தாசி, புயலும் ஒளி​யும், சப்​த​ப​தி, தர்​பாரி ராகம் ஆகிய நாவல்​களை​யும் அவரிட​மிருந்தே வாங்​கிச் சென்று படித்​தேன். ராதை​யுமில்​லை, ருக்​மணி​யுமில்​லை, நமக்கு நாமே அந்​நியர்​கள், கோதான் நாவல்​களை அவர் மொழிபெயர்த்த காலத்​தில் அரு​கிருந்து, கையெழுத்​துப் பிர​தி​யிலேயே படிக்​கும் வாய்ப்பு எனக்​குக் கிடைத்​தது.

இந்தி மொழி​யின் படைப்​பு​களைத் தமிழுக்கு வழங்​குபவ​ராக மட்​டும் இல்லாமல், இந்​தியை ஓர் ஊடக​மாகக் கொண்டு இந்​தி​யா​வின் பிற மொழி படைப்​பு​களை​யும் அவர் தமிழுக்கு அறி​முகப்​படுத்​தி​னார். இலக்​கியப் படைப்​பு​கள் வழி​யாக இந்​திய மனம் இயங்​கும் தன்​மையை அறிந்​து​கொள்​வ​தில் அவருக்கு வற்​றாத ஆர்​வம் இருந்​தது.

இந்​தி​யா​வின் ஒவ்​வொரு மொழி​யிலும் தனித்​தன்​மை​யுடன் இயங்​கும் பெண் படைப்​பாளர்​களைத் தமிழுக்கு அறி​முகப்​படுத்​தி​னார். பிர​திபா ராய், மிருதுளா கர்க், ஆஷாபூரண தேவி, இந்​திரா கோஸ்​வாமி என அவர் தமிழுக்கு அறி​முகம் செய்த படைப்​பாளி​கள் ஏராளா​மானவர்​கள்.சிறுகதைகளை​யும் நாவல்​களை​யும் மொழிபெயர்ப்​ப​தில் சரஸ்​வதி ராம்​நாத் ஆர்​வம் காட்​டியதைப் போலவே நாடகங்​களையும் ஆர்​வத்​தோடு மொழிபெயர்த்தார். தொண்​ணூறுகளின் நடுப்​பகு​தி​யில் தமிழில் நாடகப் பிர​தி​களை வெளி​யிடு​வதற்​காக பிரசுர​மான ‘வெளி’ என்​னும் சிற்​றிதழ் அவருடைய முயற்​சிகளுக்​குத் தளம் அமைத்​துக் கொடுத்​தது. இந்தி மொழி​யின் மாபெரும் படைப்​பாளி​யான பிரேம்​சந்த், சரஸ்​வதி ராம்​நாத்​தின் மனம் கவர்ந்த படைப்​பாளி.

முதலில் அவருடைய தேர்ந்​தெடுத்த சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளி​யிட்​டார். பிறகு அவருடைய வாழ்க்கை வரலாற்​றை​யும் எழு​தி​னார். ஆயினும் தன் மனம் கவர்ந்த எழுத்​தாளரின் மாபெரும் படைப்​பான ‘கோதான்’ நாவலைத் தமிழில் கொண்டு வர விரும்​பி​னார். 1998ஆம் ஆண்​டின் முதல் மாதம், முதல் நாளில் முதல் அத்​தி​யா​யத்தை மொழிபெயர்க்​கத் தொடங்​கி, அந்த ஆண்​டின் இறு​தி​யில் நிறைவு செய்​தார்.

அடுத்த ஆண்டு தொடக்​கத்​தில் எதிர்​பா​ராத வித​மாக அவருடைய உடல்​நிலை மெல்​லச் சீர்​குலை​யத் தொடங்​கியது. 02-08-1999 அன்று இயற்​கையெய்​தி​னார். அவர் மறைவுக்​குப் பின் அவருடைய பெட்​டி​யில் பாது​காப்​பாக இருந்த சில கதைகளின் மொழிபெயர்ப்பை எடுத்​து​வந்து ‘இனி வீடு திரும்​பவேண்​டும்’ என்​னும் தலைப்​பில் தொகுத்​தேன். அன்​னம் பதிப்​பகம் அதை 2002இல் வெளி​யிட்​டது. அதே அன்​னம் பதிப்​பகம் வழி​யாக 2003இல் அவருடைய கனவுப் படைப்​பான ‘கோதான்’ வெளிவந்​தது. ஏதோ ஒரு​விதத்​தில் மொழிபெயர்ப்பு என்​னும் சரஸ்​வதி ராம்​நாத்​துடைய கனவை என்​னுடைய கனவாக வரித்​துக்​கொண்ட என் மனம், அந்த நாளில் நிறைந்து தளும்​பியதை ஒரு​போதும் மறக்​க​முடி​யாது.

நாம் அனை​வரும் மறக்​கக்​கூ​டாத ஒரு முக்​கிய​மான ஆளுமை சரஸ்​வதி ராம்​நாத். அவருடைய நூற்​றாண்டு நிறைவடை​யும் தருணம் இது. அவர் தேடியளித்த மொழிபெயர்ப்​புச் செல்​வ​மும் அவருடைய பெயரும் இம்​மண்​ணுல​கில் இன்​னும்​ பல நூற்​றாண்​டு​கள்​ நீடித்​திருக்​க வேண்​டும்​.

07-09-1925 சரஸ்வதி ராம்நாத் பிறந்த நாள்

SCROLL FOR NEXT