சிறப்புக் கட்டுரைகள்

‘நிசார்’ இஸ்ரோ - நாசாவின் புதிய சாதனை

த.வி.வெங்கடேஸ்வரன்

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவும் இந்தியாவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவும் இணைந்து உருவாக்கியிருக்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க ‘நிசார்’ (NISAR - NASA ISRO Synthetic Aperture Radar) செயற்கைக்கோள், வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டிருக்கிறது.

நேற்று (ஜூலை 30) மாலை 5:40 மணிக்கு, இஸ்ரோவின் ‘ஜிஎஸ்எல்வி-எஃப்16’ ஏவூர்தி மூலம் விண்ணில் ஏவப்பட்ட இந்தச் செயற்கைக்கோள் ஏறக்குறைய 12 நாள்களுக்கு ஒருமுறை பூமியின் ஒவ்வொரு புள்ளியையும் மீண்டும் மீண்டும் படம்பிடிக்கும் திறன் கொண்டது.

இதன் மூலம் பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மாற்றங்கள், பேரிடர்கள் போன்றவற்றை நுட்பமாகவும் தொடர்ச்சியாகவும் கண்காணிக்க முடியும். நிலப் பயன்பாட்டு மாற்றங்கள், சூழலியல் மாற்றங்கள், இயற்கைச் சீற்றங்கள் ஆகியவற்றைக் கண்டறிய இது பெரிதும் உதவும்.

துல்​லியப் பார்வை: நிசார் விண்​கலத்​தின் கூர்​பார்​வைக்​குக் காரணம், அதன் இரட்டை அலைவரிசைத் தொகுப்புத் துளை வரைவு ராடார் (Dual-Band Synthetic Aperture Radar) கருவி. நிறமாலை​யில் உள்ள அனைத்து நிறங்​களின் கலவையான வெள்ளை சூரிய ஒளி, ரோஜாச் செடி​யில் பட்டு நான்கு புறமும் தெறிக்​கிறது. இந்தத் தெறிப்பு ஒளிக்​க​திர்கள் நமது கண்களை அடைந்து விழித்​திரை​யில் உள்ள ஒளி உணர்வி​களைத் தூண்​டு​கின்றன. இதையே நாம் ‘பார்வை’ என்று உணர்​கிறோம்.

‘கார்​டோ​சாட்’, ‘ரிசோர்​சாட்’ போன்ற இஸ்ரோ​வின் புவி​கண்​காணிப்புச் செயற்​கைக்​கோள்​களும் இதே முறை​யில் செயல்​படு​கின்றன. பூமி​யின் மேற்​பரப்​பில் சூரிய ஒளி பட்டு விண்​வெளியை நோக்​கித் தெறிக்​கும். இந்த ஒளிக்​க​திர்களை இஸ்ரோ​வின் புவி​கண்​காணிப்புச் செயற்​கைக்​கோள்​களில் உள்ள உயர் தெளிவு கேமராக்கள் படம்​பிடிக்​கின்றன. பொது​வாக, இவ்வாறு துல்​லியமான படங்​களைப் பெற, முதலில் பூமி​யின் அந்தப் பகுதிக்கு நேர்​மேலே சூரியன் இருக்க வேண்​டும்.

மேலும், சூரியனுக்​கும் பூமி​யின் அந்தப் பகுதிக்​கும் இடையே செயற்​கைக்​கோள் நிலை​கொள்ள வேண்​டும். கூடு​தலாக, மேகமூட்டம் அல்லது எரிமலைப் புகை, தூசு போன்றவை எந்தவித மறைப்​பை​யும் ஏற்படுத்​தாமல் இருக்க வேண்​டும். இந்நிலையில் மட்டுமே தெளிவான பார்​வை​யும் துல்​லியமான படங்​களும் கிடைக்​கும். இதன் காரண​மாக, இரவில் படம்​பிடிப்பது சாத்​தி​யமல்ல.

இங்கு​தான் நிசார் விண்​கலத்​தின் தனித்துவம் வெளிப்​படு​கிறது. வண்டின் கண்கள் புற ஊதா நிறங்​களைக் காணும் திறன் கொண்​ட​தால், இருட்​டிலும் அதன் பார்வை தெளிவாக இருக்​கும். அதுபோல, நிசாரின் கண்கள் ‘மைக்​ரோவேவ்’ எனப்​படும் நுண்​ அலைகளை உணரும் திறன்​கொண்​டவை. இருளில் நாம் டார்ச் ஒளியைப் பயன்​படுத்தி செயற்​கையாக ஒளியை உருவாக்குகிறோம்.

அதேபோல், சூரிய ஒளியைச் சாராமல், தானே நுண்​ணலைகளை உருவாக்கி பூமியை நோக்கி நிசார் அனுப்பு​கிறது. பூமி​யில் பட்டுப் பிரதிபலித்து வரும் நுண்​ணலைகளைப் பகுப்​பாய்வு செய்து, எங்கே விளைச்சல் ஏற்பட்​டு உள்​ளது, எங்கே நீரின்​மை​யால் பயிர்கள் வாடு​கின்றன, எங்கே பனி உருகி​யுள்​ளது, எங்கே நிலச்​சரிவு ஏற்பட்​டுள்ளது என்பது போன்ற பல்வேறு தகவல்​களைத் தெரிந்து​கொள்ள முடிகிறது.

இரட்டை அலைவரிசை​யின் முக்​கி​யத்துவம்: நமக்கு இரண்டு கண்கள் இருப்​ப​தால்​தான் காட்​சி​யில் உள்ள பொருள்​களின் தொலைவை உணர முடிகிறது. ஒரு பொருள் நமக்கு அருகில் உள்ளதா அல்லது தொலை​வில் உள்ளதா என்பதை இரு கண்களால் ஏற்படும் இடமாறு தோற்றம் (Parallax) மூலம் புரிந்து​கொள்​கிறோம். அதுபோல, இந்த ராடார் கருவி பூமியைச் சுற்றி வரும்​போது, அடுத்​தடுத்த இரண்டு கணங்​களில் உணரும் பிரதிபலிப்பு அலைகளை, இரண்டு கண்கள் உணரும் தனித்தனி அலைகள் போலப் பகுப்​பாய்வு செய்​கிறது.

அதாவது, நமது இரு கண்கள் உருவாக்​கும் காட்​சிகளில் உள்ள இடமாறு தோற்ற முறையைப் பயன்​படுத்தி, மூளை எவ்வாறு தொலைவை உணர்​கிறதோ, அதேபோல் இந்த ராடார் கருவி​யும் அடுத்​தடுத்த இரண்டு நேரங்​களில் பெறும் அலைகளைத் தனித்​தனியாக ஆய்வு செய்து, மலை, பள்ளத்​தாக்கு போன்ற புவிப்​பரப்​பின் ஏற்ற இறக்​கங்​களைக் கண்டறி​யும் திறன்​கொண்​டது. இதுவே தொகுப்புத் துளை வரைவு (Synthetic Aperture) நுட்​பம்.

பல நிறங்​களின் கலவையே வெள்ளை நிறச் சூரிய ஒளியாகப் புலப்​படு​கிறது. இதன் தொடர்ச்சியாக நாம் பச்சை நிறத்தைப் பிரதிபலிக்​கும் இலையை​யும் சிவப்பு நிறத்தைப் பிரதிபலிக்​கும் ரோஜாவை​யும் இனம் காண முடிகிறது. எடுத்​துக்​காட்​டாக, சூரியன் நீல நிற ஒளியை மட்டுமே வெளி​யிடு​கிறது என்று வைத்​துக்​கொள்​வோம். அந்த நிலை​யில், பச்சை இலை நீல நிற ஒளியை உறிஞ்​சிக்​கொண்டு, ஏதேனும் பச்சை ஒளி இருந்​தால் அதை மட்டும் பிரதிபலிக்​கும்.

எனவே, ஒரே ஒரு அலைவரிசை​யில் மட்டும் ஆய்வு செய்​தால், நமக்​குக் கிடைக்​கும் பார்வை வண்ணமயமாக இருக்​காது. இதனால்​தான் நிசார் விண்​கலம் இரட்டை அலைவரிசையைப் பயன்​படுத்து​கிறது. இது வெறும் ஒரு நிறத்தை மட்டும் பாய்ச்​சாமல், இரண்டு நிறங்​களைப் பாய்ச்​சு
வதைப் போன்​றது.

இரண்டு அலைவரிசைகள்: நிசார் விண்​கலம் எல்-பேண்ட், எஸ்-பேண்ட் எனும் இரண்டு அலைவரிசைகளில் நுண்​ணலைகளை வெளி​யிடும். இந்த இரண்டு அலைவரிசைகளில் பிரதிபலிக்​கும் அலைகளைப் பகுப்​பாய்வு செய்து புவிக் கண்காணிப்புப் பணிகளை மேற்​கொள்​ளும். எல்-பேண்ட் (நீண்ட அலைநீளம், ~24 செ.மீ): இது தாவரங்​கள், மண், பனிப்​பாறை​களின் அடித்​தளத்தை ஊடுரு​விச் செல்​லும்.

எனவே, காடு​கள், நிலத்தடி நீர், அண்டார்க்​டி​கா​வின் பனிப்​பாறைகளை ஆய்வு செய்​வதற்கு இது ஏற்றது. எஸ்-பேண்ட் (குறுகிய அலைநீளம், ~10 செ.மீ): இது மேற்​பரப்​பின் நுண்ணிய விவரங்களைப் படம்​பிடிக்​கும். பயிர் வளர்ச்சி, நிலநடுக்கம் அல்லது நிலச்​சரி​வால் ஏற்படும் சிறிய அசைவு​களைத் தெளி​வாகக் காட்டும். இரண்டு அலைவரிசைகளை​யும் ஒருங்​கிணைப்​பதன் மூலம், பூமி​யின் மேற்​பரப்​பில் ஏற்படும் மாற்​றங்களை மேலும் துல்​லியமாக அறிய முடி​யும்.

சிறப்பு​மிக்க ஸ்வீப்​சார்: நிசார் விண்​கலத்​தின் மற்றொரு சிறப்பு அம்சம் ஸ்வீப்​சார் (SweepSAR) என்னும் பரவு நுட்பப்​பார்​வைத் தொழில்​நுட்​பம். பள்ளி நண்பர்​களின் மீள் சந்திப்பு விழா​வில் நாம் அறைக்​குள் நுழை​யும்​போது, முதலில் அங்குள்ள அனைவரை​யும் ஒரே முறை​யில் பருந்துப் பார்​வை​யாகப் பார்க்​கிறோம். பின்னர், நம் நெருங்கிய நண்பர்கள் மீது கவனம் செலுத்து​கிறோம். அதுபோல, நிசார் கருவி முதலில் 242 கி.மீ. நீளமும் அகலமும் கொண்ட புவிப்​பகு​தி​யில் நுண்​ணலைகளைப் பாய்ச்​சுகிறது.

பிரதிபலித்த அலைகளைப் பதிவுசெய்த பின்னர், 3-10 மீட்டர் அகலம் கொண்ட சிறிய பகுதி​களில் கவனம் செலுத்தி உயர் தெளிவுக் காட்​சி​யைப் பெறுகிறது. இந்த வரிசையான பார்வை மூலம், பெரிய பகுதிகளை நுண்ணிய அளவில் கூர்​மையாக ஆய்வுசெய்ய முடிகிறது.

இதுதான் ஸ்வீப்​சார் இயங்கும் விதம். இதற்​காகவே இந்த விண்​கலத்​தில் 12 மீட்டர் அகலம் கொண்ட ராடார் அலைவாங்கி ஆண்டெனா பொருத்​தப்​பட்​டுள்​ளது. மழைக்​காலத்​தில் குடையை விரிப்​பது​போல, இந்த ஆண்டெனா விண்​வெளி​யில் குடைபோல விரி​யும்.

மூன்று மாதங்கள்: விண்​ணில் பாய்ந்​தா​லும், இன்னும் 90 நாள்கள் கடந்த பின்னரே இந்த விண்​கலம் முழு​மை​யாகச் செயல்​பாட்டுக்கு வரும். அதுவரை, விண்​கலத்​தில் உள்ள கருவிகளை இயக்​குதல், சோதனை செய்து பார்த்​தல், தகவல்​களைச் சரிபார்த்தல் போன்ற பணிகளில் விஞ்​ஞானிகள் ஈடுபடு​வார்​கள். முதலில், விண்​கலத்தைச் சரியான சுற்றுப்​பாதை​யில் நிலைநிறுத்த வேண்​டும்.

பின்னர், மடித்​துப் பொட்​டலம்போல அனுப்​பப்​பட்ட 12 மீட்டர் அகலம் கொண்ட அலைவாங்​கியை (ஆண்​டெனா) குடைபோல விரிக்க வேண்​டும். அதன் பிறகு, முன்னரே சோதனைக்​காகத் தேர்ந்​தெடுக்​கப்​பட்ட புவிப்​பகு​தி​யின் படங்கள் எடுக்​கப்​படும். இந்தப் படங்​களில் கிடைக்​கும் தகவல்​களும், பூமி​யில் உண்மையாக உள்ள தரவு​களும் ஒப்பிட்டுப் பார்க்​கப்​படும்.

எந்த அலைவரிசை செழித்த பயிர்​களைக் காட்டு​கிறது, எந்த அலைவரிசை வாடிய பயிர்​களைக் குறிக்​கிறது என்பது ஆராயப்​படும். இதன்​மூலம், கருவி​யால் உருவாக்​கப்​படும் மின்னணுத் தரவுகள் எதைக் குறிக்​கின்றன என்ப​தைத் துல்​லிய​மாகப் புரிந்து​கொள்ள முடி​யும். இந்தக் கருவிகளை இயக்கி, அவற்றின் செயல்​திறனை முழு​மையாக மதிப்பிட சுமார் மூன்று மாதங்கள் ஆகும்.

இந்த விண்​கலம் பூமியைச் சுற்றிவரும் சுற்றுப்​பாதை​யில் ஒவ்வொரு பகுதி​யின் மீதும் 12 நாட்​களுக்கு ஒருமுறை செல்​லு​மாறு அமைக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, 12 நாள்​களுக்கு ஒருமுறை பூமி​யில் ஏற்படும் நில அமைப்பு மாற்​றங்களை இந்த விண்​கலத்​தின் கழுகுக்கண் பார்வை மூலம் கண்காணிக்க முடி​யும்.

நுண்​ணலைகளைப் பயன்​படுத்து​வ​தால் இரவு அல்லது பகல், மேகம், புகை, தூசு போன்ற எந்த வானிலை நில​வி​னாலும் புவியைக் கண்​காணிக்க முடி​யும். பூமி​யின் மாற்​றங்​களைத் தொடர்ந்து கண்​காணிக்​க​வும், பேரிடர் மேலாண்மை, விவ​சா​யம், சுற்றுச்​சூழல் பாது​காப்பு போன்ற துறை​களில் முன்னேற்​றம் ஏற்​படுத்​தவும் இது பெரிதும் உதவும்​.

- தொடர்புக்கு: tvv123@gmail.com

SCROLL FOR NEXT