சிறப்புக் கட்டுரைகள்

நட்சத்திரங்களின் பாதை | நாவல் வாசிகள் 16

எஸ்.ராமகிருஷ்ணன்

ஒரு விமானப்பயணத்தின் போது அருகில் இருந்த சீக்கியர் அழகாகத் தமிழில் பேசினார். அதோடு தான் பிறந்து வளர்ந்த ஊர் சென்னை என்று பெருமையாகச் சொன்னார். கேட்கவே மகிழ்ச்சியாக இருந்தது.

1960-களில் அவர்​களின் குடும்​பம் வணி​கத்​திற்​காக மதராஸிற்​குக் குடியேறி​யிருக்​கிறது. அவர் சென்​னை​யில் பிறந்​திருக்​கிறார். இங்​கேயே கல்​லூரி வரை படித்​திருக்​கிறார். வேலைக்​காக டெல்லி சென்​றவர் அங்​கிருந்து அமெரிக்கா சென்​று​விட்​டார். இப்போதும் அவரது சகோ​தரி​கள் சென்​னை​யில் வசிக்​கிறார்​கள் என்​றார்.

சென்​னை​யின் சிறப்பு பல்​வேறு மாநிலங்​களை, மதங்​களை, மொழிகளைச் சேர்ந்த மக்​கள் இணைந்து வாழும் நகரம் என்​ப​தே. சென்​னை​யில் வாழும் பஞ்​சாபிகள் பற்றி யாரேனும் நாவல் எழு​தி​யிருக்​கிறார்​களா எனத் தெரிய​வில்​லை. ஆனால் பஞ்​சாபி எழுத்​தாள​ரான குல்​ஜார் சிங் சந்து தமிழ்​நாட்​டினைப் பற்றி ஒரு நாவல் எழு​தி​யிருக்​கிறார். ‘துருவ நட்​சத்​திரங்​கள்’ என்ற அந்​தப் பஞ்​சாபி நாவலை எழுத்​தாளர் வாஸந்தி மொழி​யாக்​கம் செய்​திருக்​கிறார். பஞ்​சாபி மொழி​யில் தமிழ் வாழ்க்கை அற்​புத​மான நாவலாக எழுதப்​பட்​டிருப்​பது ஆச்​சரியமளிக்​கிறது.

இந்த நாவலின் கதைக்​களம் காந்​தி​கி​ராமம். அது ருத்​திரபேட்​டை​யாக மாற்​றப்​பட்​டிருக்​கிறது நாவலின் நாயகி கிருஷ்ணா தமிழ்​பெண். நாயகன் விக்​டர் அமெரிக்​கன். சென்​னை, மதுரை, திண்​டுக்​கல், கோவை தேக்​கடி, ஊட்டி போன்ற இடங்​களில் கதை நடக்​கிறது. தனது ரயில் பயணம் ஒன்​றில் சந்​தித்த வெள்​ளைக்​காரத் தம்​ப​தி​கள் சொன்ன நிகழ்​வு​களை மைய​மாகக் கொண்டு இந்த நாவலை எழு​தி​ய​தாகக் குல்​ஜார் சிங் சந்து குறிப்​பிடு​கிறார். கதை​யின் நாயகி காந்​தி​கி​ராமத்​தைச் சேர்ந்​தவள் என்​றும் முன்​னுரை​யில் குறிப்​பிடு​கிறார். சரஸ்​வதி அம்​மா​வால் ஆரம்​பிக்​கபட்ட ருத்​திரபேட்டை ஆசிரமம் ஆதர​வற்ற குழந்​தைகளுக்​கான காப்​பகத்​தைக் கொண்​டிருக்​கிறது. பெற்​றோரை இழந்த கிருஷ்ணா, பிர​பா, ராஜூ என்ற மூவரும் அங்கே வளர்​கிறார்​கள். கிருஷ்ணா​வின் பெற்​றோர் வெள்​ளத்​தில் அடித்​துப் போகப்​பட்​ட​வர்​கள். பிரபா, கிராமத்​தின் பாலம் அருகே கண்​டெடுக்​கபடு​கிறாள். ராஜூ​வின் பெற்​றோர் மூன்று மாதக் குழந்​தையை ஆசிரம வாசலில் விட்​டுப் போய்​விடு​கிறார்​கள். ஆசிரமம் அவர்​களை வளர்க்​கிறது. கல்வி தரு​கிறது.

நாவலில் தமிழ்​நாட்​டிற்​குக் காந்தி வருகை தரு​கிறார். அவரைக் காணுவதற்​காக இளம்​பெண்​ணான சரஸ்​வதி, மதராஸிற்கு வரு​கிறாள். காந்​தியை நேரில் கண்டு பரவசமடைகிறாள். காந்​தி​யின் பேச்சு அவளது இதயத்​தைத் தொடு​கிறது. தானும் சமூகசேவை செய்ய வேண்​டும் என்ற எண்​ணத்தை உரு​வாக்​கு​கிறது. ஆசிரமம் ஒன்றைத் துவங்கி சமூகப்​பிரச்​சனை​களைப் புரிந்து கொள்​வ​தி​லும் அதற்​கான தீர்வு காண்​ப​தி​லும் சரஸ்​வ​தி​யின் வாழ்க்கை நீள்​கிறது. அமெரிக்​கா​விலிருந்து விக்​டர் என்ற என்​ஜினீயர் இந்த ஆசிரமத்​திற்கு வருகை தரு​கிறான். மனை​வியை விவாகரத்து செய்​து​விட்டு தனித்து வாழும் அவன், இந்​தி​யப் பெண்ணை மறுமணம் செய்து கொள்ள ஆசைப்​பட்டு வந்​திருக்​கிறான்.

ஆசிரமத்​தில் இளம்​பெண் கிருஷ்ணாவைச் சந்​திக்​கிறான். அவளது அழகில் மயங்​கித் திரு​மணம் செய்து கொள்ள ஆசைப்​படு​கிறான். அவன் யாரெனத் தெரி​யாமல் எப்​படித் திரு​மணம் செய்து வைப்​பது, ஏன் அவன் இந்​தி​யப் பெண்​ணைத் திரு​மணம் செய்து கொள்ள ஆசைப்​படு​கிறான்? என்று கேள்வி கேட்​கிறாள் ஆசிரம நிர்​வாகி எலிசபெத்.

தன்​னைப் புரிந்து கொண்ட நல்ல துணைவி தேவை. இந்​தி​யப் பெண் அப்​படி​யிருப்​பாள் என நம்​பு​கிறேன் என்​கிறான் விக்​டர். அவனது முன்​னாள் மனை​வி​யுடன் ஏற்​பட்ட கசப்​பான அனுபவங்​களே அப்​படிப் பேச வைக்​கிறது. கிருஷ்ணா இந்​தத் திரு​மணப் பேச்​சால் குழம்​பிப் போய்​விடு​கிறாள். தனது தோழிகளிடம் ஆலோ​சனை கேட்​கிறாள். ஆசிரம நிர்​வாகி​யிடம் உரை​யாடு​கிறாள். நேரடி​யாக விக்​டரிமே பேசுகிறாள். முடி​வில் திரு​மணத்​திற்​குச் சம்​மதம் தெரிவிக்​கிறாள்.

அவர்​களின் திரு​மணம் கோவை​யில் நடை​பெறுகிறது. சரஸ்​வதி அம்​மா​வின் ஆசி பெற அவரது வீடு​தேடிப் போகிறார்​கள். இந்​தி​யப் பழக்க வழக்​கங்​களை​யும் வாழ்க்கை முறை​யினை​யும் மாற்​றிக் கொள்​ளா​விட்​டால் கிருஷ்ணா அமெரிக்க வாழ்க்​கைக்​குப் பொருந்​த​மாட்​டாள் என விக்​டர் நினைக்​கிறான். அதன் முதல்​முயற்​சி​யாக அவளைப் புடவை கட்​டக்​கூ​டாது. கவுன் அணிந்து கொள்ள வேண்​டும் என்று கட்​டுப்​பாடு விதிக்​கிறான். அது கிருஷ்ணா​விற்​குப் பிடிக்​க​வில்​லை.

“பரஸ்பர விருப்பு வெறுப்​பு​களை அனுசரித்​துச் செல்​வதோடு மதிக்​க​வும் கற்​றுக் கொள்ள வேணடும். அதுவே திருமண வாழ்​வின் வெற்​றிக்கு அடித்​தளம்” என்​கிறார் சரஸ்​வதி அம்​மா. அந்த அறி​வுரையை விக்​டர் விரும்​ப​வில்லை. அவர்​கள் தேனில​விற்​காக ஊட்​டிக்​குப் போகிறார்​கள். அங்​கும் அவர்​களுக்​குள் வாக்​கு​வாதம் நடக்​கிறது. முடி​வில் அவர்​கள் அமெரிக்கா புறப்​படு​கிறார்​கள். புதிய தேசம், புதிய வாழ்க்கை கிருஷ்ணா​விற்கு அச்​சமளிக்​கிறது. நியூ​யார்க் நகர​மும் அதன் பிரம்​மாண்​ட​மான கட்​டிடங்​களும் வாகன நெருக்​கடி​யும் கண்​ணைப் பறிக்​கும் நியான் விளக்​கு​களும் இங்கே எப்​படி வாழப்​போகிறோம் என்ற பயத்தை ஏற்​படுத்​துகிறது. விக்​டர் வேலைக்​குப் போய்​விடு​கிறான். அவள் மட்​டும் வீட்​டில் தனித்​திருக்​கிறாள். அப்​படி​யான நாட்​களில் தனது தனிமை​யைத் தாங்க முடி​யாமல் கிருஷ்ணா வாய்​விட்டு அழுகிறாள்.

வீட்​டிற்கு வரும் விக்​டரின் நண்​பர்​கள் பேசும் ஆங்​கிலம் அவளுக்​குப் புரிவ​தில்​லை. உடல் நலமற்ற நாட்​களில் துணைக்கு யாரு​மே​யில்​லையே என ஏக்​க​மாக இருக்​கிறது. இந்​நிலை​யில் அவள் கர்ப்​ப​மாகிறாள். பெண் குழந்தை பிறக்​கிறது. நான்கு ஆண்​டு​கள் கடந்து போகின்​றன. வாழ்க்​கை​யின் ஓட்​டம் அவளை​யும் உள்​ளிழுத்​துக் கொள்​கிறது. அவளோடு ஆசிரமத்​தில் வளர்ந்த ராஜூ சினி​மா​வில் நடித்​துப் பெரிய நடிக​னாகிறான். அவன் அமெரிக்​கா​விற்கு வருகை தந்த போது கிருஷ்ணாவை சந்​திக்​கிறான். கிருஷ்ணா மாறி​யிருக்​கிறாள். ஆனாலும் இந்​தி​யப்​பெண் போலப் புடவை கட்​டி​யிருக்​கிறாள். அவளது குடும்ப வாழ்க்​கை​யைப் பற்றி ராஜூ விசா​ரிக்​கிறான்.

“கொஞ்​சம் உரிமை கிடைச்​சது. கொஞ்​சம் நானா எடுத்​துகிட்​டேன்” என்​கிறாள். அத்​தோடு, “நம்ம அடிப்​படை உரிமை என்​னனு முதல்ல நாம உணரணும். அது நியாய​மானதுன்னு மத்​தவங்​களுக்​குப் புரிய வெச்​சோம்னா எந்​தச் சிக்​கலும் வராது” என்​கிறாள். அவளது முதிர்ச்​சி​யான பேச்​சில் அனுபவம் வெளிப்​படு​கிறது. வாழ்க்கை நெருக்​கடிகள் துரும்பை கூட உறு​தி​யாக்கி விடும் என்று புரி​கிறது.

விக்​டரை சந்​திக்​கும் போது அவனது பேச்​சிலும் நடத்​தை​யிலும் ஏற்​பட்​டுள்ள மாற்​றத்​தைக் கண்டு ராஜூ வியந்து போகிறான். அது கிருஷ்ணா​வால் ஏற்​படுத்​தப்​பட்​டது என்​பது புரி​கிறது. தனது குழந்​தைகளுக்​குத் தமிழ் கற்​றுக் கொடுக்க வேண்​டும் என்று கிருஷ்ணா ஆசைப்​படு​கிறாள். அமெரிக்​கா​வில் வசித்​தா​லும் தனது தாய்​நாட்​டை, மொழியை, நண்​பர்​களை, ஆசிரமத்தை மறக்​காமல் இருக்​கிறாள். தேவை​யான உதவி​கள் செய்​கிறாள். சில வருஷங்​களுக்​குப் பின்பு ஆசிரமத்​திற்கு வரும் ராஜூ அங்கே உரை​யாற்​றும் போது “எல்​லோரும் நம்​முடைய வாழ்க்கை உயர வேண்​டும் என நினைக்​கிறோம். ஆனால் மற்​றவர்​கள் வாழ்க்கை உயர வேண்​டும் என நினைப்​ப​தற்​குப் பெரிய மனது வேண்​டும். அப்​படி​யான ஒரு பெண்​ணாகக் கிருஷ்ணா இருக்​கிறாள்” என்று பெரு​மை​யாகச்​ சொல்​கிறான்​. பஞ்​சாபி​யில்​ எழுதப்​பட்​ட இந்​த தமிழ்​நாவலுக்​காகக்​ குல்​ஜார்​ சிங்​கை எவ்​வளவு ​பா​ராட்​டி​னாலும்​ தகும்.

SCROLL FOR NEXT