சிறப்புக் கட்டுரைகள்

சூழ்நிலைகளின் நீரோட்டம் | நாவல் வாசிகள் 11

எஸ்.ராமகிருஷ்ணன்

காலுக்கும் மண்ணுக்கும் உள்ள உறவு யுகம் யுகமாக இருக்கிறது. மண்ணும் பாதங்களும் இணைபிரியா நண்பர்கள் என்று ‘சூரியகாந்திப் பூவின் கனவு’ நாவலில் சையத் அப்துல் மாலிக் குறிப்பிடுகிறார் . சாகித்ய அகாதமியின் பரிசு பெற்ற இந்த அஸ்ஸாமி நாவலை நேஷனல் புக் டிரஸ்ட் வெளியிட்டுள்ளது. கரிச்சான்குஞ்சு தமிழாக்கம் செய்திருக்கிறார்.

வடகிழக்​குப் பிரதேசத்​தில் வாழுகிறவர்​கள் தங்​களுக்​கென ஒரு தொன்​மை​யான வரலாற்​றைக் கொண்​டுள்​ளனர். ஒரு​புறம் அவர்​களின் வழி​பாடு, சடங்​கு​கள், நம்​பிக்​கைகள் அப்​படியே பின்​பற்​றப்​படு​கின்​றன. இன்​னொரு பக்​கம் காலனிய ஆட்​சி​யால் உரு​வான மதமாற்​றம், கல்வி வளர்ச்​சி, நவீன வாழ்க்கை முறை, அரசி​யல் மற்​றும் பண்​பாட்டு மாற்​றங்​கள் புதிய முகத்தை உரு​வாக்​கி​யுள்​ளது.

பனிமூட்​டத்​தினுள் மறைந்​திருக்​கும் மலை​யினைப் போலவே வடகிழக்கு மாநிலத்​தின் வாழ்க்​கை​யும் தெளி​வாக அறிய முடி​யாதது. இலக்​கி​யத்​தின் வழியே அந்த மக்​களின் சுக துக்​கங்​கள். சமூகப்பிரச்​சனை​கள். பண்​பாட்டு சூழல் மற்​றும் எதிர்​வினை​களை ஒரளவு அறிந்து கொள்ள முடிகிறது. சரித்​திரத்​தில் சாமானியர்​களுக்கு இடமில்லை எனும் போது இலக்​கியமே சாமானியனின் இருப்​பை​யும் குரலை​யும் முதன்​மை​யாக்​கு​கிறது.

சையத் அப்​துல் மாலிக் நாவலின் தொடக்​கத்​திலே தன்​சிரி நதி மற்​றும் டாலிம் கிராமத்​தின் ஒட்​டுமொத்த படத்தை வரைந்​து​விடு​கிறார். குல்ச்​சின் வாழ்க்​கை​யில் வரும் மூன்று பெண்​களின் உறவு மற்​றும் நெருக்​கத்​தைப் பற்​றியதே இந்​நாவல். தன்​சிரி நதி​யின் மேற்கு கரை​யில் டாலிம் கிராமம் இருக்​கிறது. எழு​பது குடும்​பங்​கள் வாழும் சிறிய கிராமம். இந்​துக்களும் இஸ்​லாமியர்​களும் நேபாளி​களும் இணைந்து வாழும் சிற்​றூர். நெல்​லும் கரும்​பும் சோள​மும் சணலும் பயிர் செய்​கிறார்​கள்.

பழைய டாலிம் புது டாலிம் என ஊர் இரண்​டாகப் பிரிந்து உள்​ளது. காட்டு யானை வந்து அவர்​கள் விளைச்​சலை அடிக்​கடி பாழ்​படுத்​துகிறது. ஊருக்​குள் புகுந்து புலி, மாடு​களை அடித்​துக் கொல்​கிறது. டாலிமில் நான்கு பேர்​கள் துப்​பாக்கி வைத்​திருக்​கிறார்​கள். அந்த ஊருக்​குள் அரு​கிலுள்ள பெரிய நகரம் கோலா​காட். அங்கே தான் நீதி​மன்​றம் உள்​ளது. டாலிம் கிராமத்​திற்​கு பஸ் போக்​கு​வரத்​துக் கிடை​யாது. மாட்​டு​வண்​டி​யில் தான் செல்ல வேண்​டும். கிராம​வாசிகள் எப்​போ​தாவது வானில் செல்​லும் விமானங்​களைப் பார்த்​திருக்​கிறார்​கள். ஆனால் ரயிலைப் பார்த்​தது கிடை​யாது. நகரத்​திற்​குப் போய் வந்​தவர்​கள் ரயிலைப் பற்​றிச் சொல்​லும் போதெல்​லாம் ஆச்​சரியப்​படு​கிறார்​கள்.

அந்த ஊரில் ஒரு பள்​ளிக்​கூடம் இருக்​கிறது. ஆனால் கல்வி அதி​காரி எவரும் அதனைப் பார்​வை​யிட்​ட​தில்​லை. ஊருக்​குள் போலீஸ் வந்​தது கிடை​யாது. தங்​கள் பிரச்​சனை​களைத் தாங்​களே தீர்த்​துக் கொள்ள வேண்​டும் என மக்​கள் நினைக்​கிறார்​கள். தேர்​தல் பற்​றியோ, ஓட்​டுப் போடு​வது பற்​றியோ கூட அவர்​களுக்கு எது​வும் தெரி​யாது. ஒளிரும் சூரிய​னால் கூடக் கிராமத்​தில் இருந்த பழமை​யின் இருட்​டைப் போக்க முடிய​வில்லை என்​கிறார் சையத் அப்​துல் மாலிக்.

குல்ச் என்ற இரு​பது வயது இளைஞன் தான் காதலித்த சேன்​மாயி என்ற இளம்​பெண்​ணுடன் ஊரை​விட்டு ஓடி​விடு​கிறான். மறு​நாள் பக்​கத்து ஊரின் மாட்​டுக் கொட்​டகை​யில் ஒளிந்​திருந்த அவர்​களைப் பிடித்​து​விடு​கிறார்​கள். சேனி​மா​யி​யின் தந்தை மற்​றும் சித்​தப்பா அவளை அடித்து இழுத்​துப் போகிறார்​கள். குல்ச்​சின் தந்தை அவனை வீட்​டை​விட்டுத் துரத்​தி​விடு​கிறார். அவனுக்​காகப் பரிந்து பேசிய அவனது அம்​மாவை​யும் துரத்தி அடிக்​கிறார். அவர்​கள் இரு​வரும் நதிக்​கரையோரம் சிறிய வீடு அமைத்​துக் கொண்டு தனியே வாழுகிறார்​கள். பெற்ற மகனின் ஆசையைப் புரிந்து கொள்​ளாத மனிதனோடு தான் சேர்ந்து வாழ மாட்​டேன் என்​கிறாள் குலச்​சின் அன்​னை. மகனைப் புரிந்து கொள்​ளாத தந்​தையைப் பற்றி எத்​தனையோ கதைகள் இருக்​கின்​றன. மகனைப் புரிந்து கொள்​ளாத அன்​னையைப் பற்றி நான் கேள்​விபட்​ட​தில்​லை. இந்த நாவலில் வரும் குல்​சின் தாய் அவனது ஆசைகளை மட்​டுமில்​லை. மௌனத்​தை​யும் புரிந்து வைத்​திருக்​கிறாள். குல்ச்​சின் தாய்க்கு உழைக்​காமல் சாப்​பிட தெரி​யாது. இது ஒரு தலை​முறைக்கே இருந்த குணம். உழைக்​காமல் சாப்​பிட்​டால் உடம்​பில் ஒட்​டாது என நினைத்​தார்​கள். விவரம் தெரிந்த வயதிலிருந்து அவள் வேலை செய்​கிறாள். எந்த வேலைக்​கும் அஞ்ச மாட்​டாள். அது தான் அவளை ஆரோக்​கிய​மாக வைத்​திருந்​தது.

குல்ச், அதே ஊரில் உள்ள தாரா என்ற பெண்​ணுடன் நட்​பாகப் பழகு​கிறான். அவளைக் காணுவதற்​காக அடிக்​கடி அவளது வீட்​டிற்​குப் போகிறான். அங்கே தாரா​வின் சித்தி கபாஹி தங்​கள் குடும்​பக் கஷ்டங்​களை அவனிடம் பகிர்ந்து கொள்​கிறாள். தாரா​வின் மீது அவனுக்​குக் காதல் உரு​வாகிறது. அவளைத் திரு​மணம் செய்து கொள்ள ஆசைப்​படு​கிறான். இந்​நிலை​யில் சேன்​மா​யிக்​குத் திரு​மணம் ஏற்​பா​டாகிறது.

கேலாயி என்ற நடுத்​தர​வயதுக்​காரனை மாப்​பிள்​ளை​யாக முடிவு செய்​கிறார்​கள். அவன் ஒரு காசநோ​யாளி. மரணத்​திற்​காகக் காத்​திருப்​பவன், ஒடிப்​போனவளை வேறு யாரும் கட்​டிக் கொள்ள மாட்​டார்​கள் எனச் சொல்லி அந்​தத் திரு​மணத்​தைச் சேன்​மாயி சித்​தப்பா ஏற்​பாடு செய்​கிறார்.

தன்​னைக் காதலித்த காரணத்​தால் தான் சேன்​மா​யின் வாழ்க்கை இப்​படி ஆகி​விட்​டது எனக் குல்ச் வருத்​தமடைகிறான். இழந்த காதலின் துயரை விட​வும் அது ஏற்​படுத்​தும் குற்​றவுணர்வு வலிமை​யானது. டாலிம் கிராமத்​தில் ஸபீ​யத் என்​றொரு கிழ​வர் இருக்​கிறார். அவர் தனது கல்​யாணத்​திற்​காக முக்​கால் ரூபாய்க்கு ஒரு ஜோடி செருப்பு வாங்​கி​னார். அதைக் கல்​யாணத்​தின் போது அணிந்து கொண்​டார். பின்பு கழட்டி துணி​யில் சுற்றி பரண் மேல் வைத்​துக் கொண்​டார். யார் வீட்​டிலா​வது திரு​மணம் அல்​லது பண்​டிகை வரும் போது அந்​தச் செருப்​பைப் போட்​டுக் கொள்​வதுண்​டு.

திரும்பி வந்​தவுடன் அதைக் கழு​வித் துடைத்​துப் பரண் மேல் போட்​டு​விடு​வார். அவரது மகன் தனது கல்​யாணத்​திற்​குப் புதி​தாகச் செருப்பு வாங்க வேண்​டும் எனக் கேட்​ட​போது தனது செருப்​பு​களை அணிந்து கொள்​ளும்​படி​யாகச் சொன்​னார். காலிற்​குப் பொருந்​தாத அந்​தச் செருப்​பைப் போட்டு தான் அவரது மகன் திரு​மணம் செய்து கொண்​டான்.

ஸபீ​யத் வீட்​டிற்கு வெளி​யாட்​கள் யாராவது வந்​தால் தனது தோட்​டத்து மாம்​பழத்தை சாப்​பிடத் தரு​வார். ஆனால் அதன் கொட்​டையை வீட்​டு​வாசலிலே போட்​டு​விட வேண்​டும். வெளியே கொண்டு போய்​விட்​டால் அந்த ஜாதி மாம்​பழம் வேறிடத்​தில் முளைத்​து​வந்​து​விடும் என்​பதே காரணம். அவருக்​குத் தாரா​வின் சித்தி மீது ஒரு கண். அவளை அடைய வேண்​டும் எனக் காத்​திருக்​கிறார். குலச், தான் விரும்​பும் தாராவைத் திரு​மணம் செய்து கொள்ள ஏற்​பாடு செய்​கிறான்.

ஆனால் அந்​தத் திரு​மணத்​தில் மணப்​பெண் போலக் கபாஹி நாடக​மாடி குல்சை திரு​மணம் செய்​து​விடு​கிறாள். பகடை​யாட்​டத்​தில் தொடர்ந்து தவறான எண் விழும் சூதாடியைப் போலாகிறான் குல்ச். விரும்​பிய வாழ்க்கை அவனுக்​குக் கிடைக்​க​வில்​லை. கிடைத்த வாழ்க்கை ஏற்​கும்​படி​யாக இல்​லை. சமரசங்​களால் ஆனதே வாழ்க்கை என உணர்ந்து கொள்​கிறான்​. காலத்​தின்​ திரைகளை விலக்​கி மனிதர்​களின்​ கனவு​களை​யும்​ ஆசைகளை​யும்​ ஏமாற்​றத்​தை​யும்​ ஒளிவுமறை​வின்​றிச்​ சொன்​ன விதத்​தில்​ இந்​த நாவல்​ முக்கிய இலக்கியப் படைப்பாகிறது.

SCROLL FOR NEXT