சிறப்புக் கட்டுரைகள்

திடக்கழிவு மேலாண்மை என்ற தில்லுமுல்லு

கே.சந்துரு

சமீபத்தில் கொடுங்கையூர் பகுதியிலுள்ள குப்பைக் கிடங்குகளில், மட்கிப்போன குப்பைகளை உயிரிச் சுரங்கம் (Biomining) முறையில் எடுத்து, அவற்றிலிருந்து மாற்றுச் சக்தி உற்பத்தி செய்யப் போவதாக வெளியான அரசு வெளியிட்ட அறிவிப்பு, அப்பகுதி மக்களைக் கொதித்தெழச் செய்துள்ளது. சில தினங்களுக்கு முன்னால் அவர்கள் மனிதச் சங்கிலி அமைத்து அதற்குத் தமது எதிர்ப்பைத் தெரிவித்தனர்.

கொடுங்​கையூர் பகுதி மக்கள் எதிர்​கொண்டு​வரும் கொடுமைகள் நமது கண்களில் ரத்தத்தை வரவழைக்​கும். மருந்​தடித்தும் மாளாது வீடுகளில் குவியும் ஈக்கள் பட்டாளம்; கொசுவத்​திகள் ஏற்றி வைத்தாலும் ரத்தத்தை உறிஞ்சிச் செல்லும் ராட்சசக் கொசுக்கள்; குப்பைகளுக்குத் தீ மூட்டு​வதால் எழும் புகை மண்டலங்கள் ஏற்படுத்தும் மூச்சடைப்பு, நெஞ்சுக்​குழாய் நோய்கள்; காற்றடித்தால் பறந்து​வரும் கரித்து​கள்கள் வீடுகளில் படியும் அவலம் எனக் கொடுமை​களின் பட்டியல் நீளும். இறுதியாக, மாநகராட்சி செய்த ஒரே செயல் குப்பைக் கிடங்குகளை ஒட்டி​யுள்ள வீதியில் ஆறடிக்குத் தடுப்புச் சுற்றுச்​சுவர் கட்டியது மட்டுமே. கிடங்கு​களில் கொட்டப்பட்ட கழிவு​களைத் தரம் பிரிப்​பதில் ஈடுபட்டது ஏழைச் சிறுவர்​களும் பன்றிகளுமே.

மனமாற்​றமும் சட்டமும்: 1920இல் கொண்டு​வரப்பட்ட நகராட்​சிகள் சட்டம் முதன்​முறை​யாகக் கழிப்​பறைகளை அமைத்து, அவற்றின் பராமரிப்புப் பணிகளை நகராட்​சிகளிடம் ஒப்படைத்தது. உலர் கழிப்​பறைகள் உருவாக்​கப்​பட்டு, அவற்றைப் பராமரிக்க சுகாதாரப் பணியாளர்கள் நியமிக்​கப்​பட்​டனர். மதராஸ் மாகாணம் என்று அழைக்​கப்​பட்​டாலும், உலர் கழிப்​பறை​களைச் சுத்தம் செய்த ஊழியர்கள் சமூகப் புறக்​கணிப்பு கருதி, சொந்த ஊருக்கு அருகி​லிருந்த நகராட்​சிகளில் இப்பணி​யாற்ற முன்வந்​த​தில்லை. தெலுங்கு பேசும் ஆந்திரர்கள் தமிழகப் பகுதி​களி​லும், தமிழர்கள் கன்னடம், கேரளப் பகுதி​களிலும் பணியாற்றி வந்தனர்.

நகராட்​சிகளின் மக்கள்தொகை பெருகப்​பெருக அவை மாநகராட்​சிகளானதுடன், பொது இடங்களில் சேரும் குப்பைகள், தனியார் வீடுகள், வணிக நிறுவனங்​களி​லிருந்து சேரக்​கூடிய குப்பைகளை அகற்றுவது, கழிவுநீர் பராமரிப்பு ஆகியவற்​றையும் சேர்த்து நிர்வகிக்க நேரிட்டது. குப்பைகளை நகராட்சி லாரிகளில் ஏற்றி, நகருக்கு அப்பால் உள்ள தாழ்வான பகுதி​களில் தள்ளி​விட்டு வருவது தலையாய பணியாக இருந்தது. சுகாதாரப் பணியாளர்கள் பணிக்கு ஒருநாள் வரவில்லை என்றாலும் மக்கள் படக்கூடிய அவதிகள் சொல்லி மாளாது.

1940களில் நடைபெற்ற தூய்மைப் பணியாளர்​களின் வேலைநிறுத்தம் சில வாரங்​களுக்கு சென்னையையே நாறடித்தது. உலகம் முழுதும் பல நகரங்​களில் திடக்​கழிவு மேலாண்மை குறித்து விழிப்பு​ணர்வு ஏற்பட்​டதையொட்டி, இங்கேயும் அது குறித்துப் பேச ஆரம்பித்​தனர். பழைய குப்பை லாரிகள் வாரிச்​சென்று, கண்ட இடத்தில் கழிவு​களைத் தள்ளி​விட்டு வருவது முறையல்ல என்று உணர முற்பட்​டனர். அதையொட்டி, 2000இல் திடக்​கழிவு (மேலாண்மை, கையாளுதல்) விதிகள் உருவாக்​கப்​பட்டன.

விதிமுறைகள் சொல்வது என்ன? - புதிய விதிகளின்படி மாநகராட்​சிகளில் உள்ள திடக்​கழி​வு​களைத் தரம் பிரித்து, அவற்றைத் தனித்​தனி​யாகச் சேமித்து, சேகரிப்பு நிலையங்​களில் உள்ள கிடங்கு​களுக்குக் கொண்டு சென்ற பிறகு கையாள வேண்டிய நடவடிக்கைகள் வரையறுக்​கப்​பட்டன. அங்கீகரிக்​கப்பட்ட குப்பைக் கிடங்கு​களுக்கான பகுதிகள் கண்டறியப்​படு​வதோடு, அங்குள்ள மக்களின் கருத்து​களைக் கேட்டறிந்து, உரிய உரிமம் பெற்ற பின் திடக்​கழி​வு​களைக் கையாள வேண்டி​யிருந்தது. நகரங்​களி​லிருந்து பெறப்​படும் திடக்​கழி​வுகள் மட்கிய / மட்காத என்று மீண்டும் இனம் பிரிக்​கப்​பட்டு, அவற்றுக்கான குழிகளில் குறிப்​பிட்ட காலத்​துக்குப் பாதுகாக்​கப்பட வேண்டும்.

கழிவு​களால் குழிகள் நிரப்​பப்​பட்​ட​வுடன் குறிப்​பிட்ட வேதிப் பொருள்​களுடன் அவற்றை மூட வேண்டும். கழிவு​களிடப்பட்ட புதைகுழிகள் குறிப்​பிட்ட காலத்​துக்குப் பிறகு தோண்டி​யெடுக்​கப்​பட்டு, இயற்கை உரங்களாக விநியோகிக்​கப்​படும். ஞெகிழி, மட்காத கழிவுப் பொருள்கள் நிரந்​தரமாக அக்குழிகளில் உறங்க வைக்கப்​படும். நகரங்​களி​லிருந்து வரக்கூடிய குப்பைகள் தரம் பிரிக்​கப்​படும்​போது, அதில் கண்டுள்ள உலோகப் பொருள்கள் பிரித்து எடுக்​கப்​படு​வதுடன், திடமான பொருள்கள்; கட்டிடம் சார்ந்த பொருள்​களைத் தனியாகப் பிரித்து எடுத்து, மறுசுழற்சிக்கு விடுவதற்கான ஏற்பாடு​களும் உண்டு. கழிவுகள் கொட்டப்​படும் புதைகுழிகள் வழியாகக் கழிவுப் பொருள்​களோடு கலந்த கழிவுநீர் கசிந்து, நிலத்தடி நீரை மாசுபடுத்​தாமல் இருப்​ப​தற்கான கட்டுப்​பாடு​களும் உண்டு.

குப்பைகளைக் கரியாக்கும் விதமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்து​வதற்குத் தடை விதிக்​கப்​பட்டது. தீப்பிடித்து எரியும் குப்பைக் கிடங்கு​களி​லிருந்து கிளம்பும் புகை, காற்று மண்டலத்தை மாசுபடுத்து​வதோடு, அருகில் விமான நிலையங்கள் இருந்தால் விமானங்கள் தரையிறங்கிச் செல்வதற்கும் ஆபத்து ஏற்படும் என்பதால், விமான நிலைய அதிகாரி​களிட​மிருந்து தடையில்லாச் சான்றுகள் பெற வேண்டும். ஆனாலும் போகிப் பண்டிகை​யின்போது குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்துவது மட்டும் நிறுத்​தப்​பட​வில்லை. அன்றைய தினம் மட்டும் விமானங்கள் தாமதித்தே சென்று வருகின்றன.

நிதர்சனம் என்ன? - இது தவிர, மாசுக்​கட்டுப்​பாட்டு வாரியத்​திடம் இருந்து நீர், காற்று மாசுபடுத்​தாமைக்குத் தடையில்லாச் சான்றிதழ் பெற வேண்டும். இவற்றைச் செய்வதற்கான தொழில்​நுட்ப அறிவோ (அ) பயிற்சி பெற்ற ஊழியர்களோ நகராட்​சிகளிடம் இருந்​த​தில்லை. திடக்​கழிவு மேலாண்மை விதிகள் நடைமுறைக்கு வந்த பிறகும் பல நகராட்​சிகள் திடக்​கழிவு மேலாண்மைப் பணிகளை மேற்கொள்ள​வில்லை. பல மாநகராட்​சிகள் மத்திய அரசின் நகர மேம்பாட்டுத் துறையிடமிருந்து நிதியுதவி, உலக வங்கி​யிட​மிருந்து பெரும் கடன் பெற்ற பிறகும், திடக்​கழிவு மேலாண்​மையில் முன்னேற்றம் எதுவும் ஏற்பட​வில்லை.

சென்னையில் பள்ளிக்​கரணையை ஒட்டி இயற்கையாக அமைந்த சதுப்பு நிலங்​களில் கழிவு​களைக் கொட்டு​வதும், யாரும் அறியா​வண்ணம் கள்ளத்​தனமாக அவற்றைத் தீயிட்டுக் கொளுத்து​வதும் நடைபெற்றன. அங்கிருந்த கைவேலி நிலங்கள் இவ்வாறு தூர்க்​கப்​பட்டுப் பல ஆக்கிரமிப்புக் குடியிருப்பு​களும், வணிக நிறுவனங்​களும் உருவாகி​யுள்ளன. இவற்றை எதிர்த்துப் பசுமை ஆர்வலர்​களால் போடப்பட்ட வழக்கு​களில் பல்வேறு விதமான தீர்ப்புகளை நீதிமன்றம் அளித்தது. 4,000 ஏக்கராக இருந்த கைவேலி இன்று 400 ஏக்கராகச் சுருங்கி​விட்டது. இன்று பல மாநிலங்​களின் விருந்​தினர் இல்லங்கள் அந்த நிலத்தின் மீது கம்பீரமாக உட்கார்ந்​திருக்​கின்றன.

குப்பைகளைத் தீ வைத்துக் கொளுத்திச் சாம்பலாக மாற்றும் வேலையை நிறுத்த வேண்டும் என்று சென்னை, ஆலந்தூர் நகராட்​சிகளுக்குத் தடை விதிக்​கப்​பட்​டிருந்த​போதும் தீயிட்டுக் கொளுத்துவது தொடர்ந்து நடைபெற்றுக்​கொண்​டிருந்தது. ஒரு மென்பொருள் நிறுவனம் இது குறித்துப் புகார் செய்தபோது இரண்டு நகராட்சி ஆணையர்கள் மீதும் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை ஏன் எடுக்கக் கூடாது என்று அறிவிக்கை அனுப்​பப்​பட்டது. அவ்விரு ஆணையர்​களும் 15.12.2008இல் நீதிமன்​றத்தில் நேரில் ஆஜராகி நிபந்​தனையற்ற மன்னிப்புக் கோரினர். வேங்கடமங்கலம் குப்பைக் கிடங்கு விரைவில் செயல்படத் தொடங்கும் என்றும் தெரிவித்​தனர்.

புதிய திடக்​கழிவு மேலாண்மை விதிகளின்படி நகராட்சி இரண்டு இடங்களைக் கண்டறிந்தது. மேற்கில் கொடுங்​கையூரும் தெற்கில் பெருங்குடியுமே அவர்களுக்குக் கிட்டின. இதனால் கொடுங்​கையூருக்கு இழைக்​கப்பட்ட அநீதி சொல்லி மாளாது. கழிவு​களைச் சேமிக்கும் கிடங்குகள் உருவாக்​கப்படக் கூடாதென்று மக்கள் போராடியும் பயனில்லை. நீதிமன்​றத்தில் போடப்பட்ட வழக்குகள் பல முறை விசாரிக்​கப்​பட்டும் அறிவியல்​பூர்வமாக அவர்களது குறை தீர்க்​கப்​பட​வில்லை.

வழக்குகள் பலமுறை வந்தபோதும் திடக்​கழிவு மேலாண்மை கையாளும் விதிகளின் சிறப்புகள் பற்றி எடுத்​துரைத்து வழக்குகளை நீதிமன்றம் முடித்​துக்​கொண்டது. மக்களின் ஏக்கப் பெருமூச்​சுகளுக்குப் பிறகும் குப்பைக் கிடங்குகள் நிரம்பி வழிய ஆரம்பித்த பின்னரே நகராட்​சிகள் மாற்றிடங்​களைத் தேட ஆரம்பித்தன.

மாதவரம் நகராட்சி அங்கு குவியும் குப்பைகளைக் கிராமத்​திலேயே கொட்ட ஆரம்பித்ததை எதிர்த்து, அருகி​லிருந்த கில்பர்ன் நகர் மக்கள் நல்வாழ்வுச் சங்கம் வழக்கு தொடுத்தது. மாதவரத்தில் அனைத்து விதமான கழிவு​களையும் சேகரித்துத் தீ மூட்டிய நகராட்​சியின் நடவடிக்கைகளைத் தடுக்க வேண்டும் என்று அவர்கள் கேட்டுக்​கொண்​டனர். வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கறிஞர் ஆணையர் ஒருவரை நியமித்து மாற்று இடம் குறித்து ஆலோசனை வழங்கக் கூறியது.

இதற்குள் நகராட்சியே பக்கத்​திலிருந்த சடையான்​குப்​பத்தை அடையாளம் காட்டியது. நீதிமன்ற ஆணையர் அளித்த அறிக்கை​யின்படி, சடையான்​குப்​பத்தில் திடக்​கழிவு மேலாண்மை விதிகளைப் பின்பற்றிக் குப்பைக்​கிடங்கை அமைத்​துக்​கொள்ளச் சொல்லி வழக்கு முடிக்​கப்​பட்டது.

அதன்பின் கில்பர்ன் நகர் மக்களுக்கு என்ன ஆயிற்று என்று தெரியாது. ‘கில்​பர்ன்’ அங்கிருந்த கம்பெனி ஒன்றின் பெயர். அந்த ஆங்கில வார்த்தைக்கு இன்னொரு அர்த்​தமும் உண்டு. ‘கொல்லு & கொளுத்து’ என்பதுதான் அவ்வார்த்தையின் உண்மையான அர்த்தம். அதுதான் அங்கு பிரதிபலித்​துக்​கொண்​டிருந்தது. நீதிமன்ற உத்தர​வுகள் எவ்விதத் தாக்கத்தையும் உண்டாக்க​வில்லை என்று ‘தி இந்து’ நாளிதழ் செய்தி வெளியிட்டது (13.4.2007).

இதன் நிறைவுப்​ பகுதி நாளை (ஜூன் 6) வெளியாகும்

SCROLL FOR NEXT