சிறப்புக் கட்டுரைகள்

கூலிப்படையில் இருந்து மாணவர்களை மீட்போம்!

சூ.ம.ஜெயசீலன்

இந்திய அளவில் உயர் கல்வியில் சேர்கிறவர் களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். ஆனால், நகை வழிப்பறி, திருட்டு, வன்முறை, கொள்ளை, கொலை செய்கிறவர்களில் பள்ளி-கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் அல்லது அந்த வயது உடையவர்களும் இருக்கிறார்கள் என்பது சமீபகாலமாக மிகுந்த கவலையூட்டும் போக்காக மாறிவருவதையும் நாம் கவனித்தே ஆக வேண்டும்.

“பள்ளி இறுதித் தேர்வு முடிந்து மாணவர்கள் அமைதி​யாகப் பள்ளி வளாகத்தை​விட்டுச் செல்லக் காவல் நிலை​யங்கள் மூலமாகப் பாது​காப்பு பெற்றுக்​கொள்​ளுங்​கள்” என முதன்​மைக் கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்​களுக்கு எழுதுகிறார். “சிறு​வர்​களுக்​குப் பணம் கொடுத்து மனநிலையை மாற்றிக் குற்​றங்​களில் ஈடுபடச் செய்​கிறவர்​களிடம் கவனமாக இருங்​கள்” எனத் தமிழக சட்டப்​பேர​வைத் தலைவர் குறிப்​பிடு​கிறார். அதாவது, பள்ளிக்​கூடத்​தி லேயே மாணவர்கள் வன்முறை​யில் இறங்கு​வார்கள் என்றும் கூலிப்​படை​யில் மாணவர்களைச் சேர்க்​கிறார்கள் கவனமாக இருங்கள் என்றும் அரசாங்கம் கவலை​யுடன் அறிவுறுத்து​கிறது.

பள்ளி மாணவர்​களான பதின்​பரு​வத்​தினரும், கல்லூரி மாணவர்​களான இளைஞர்​களும் அந்தந்தப் பருவத்​தில் தங்களுக்கான அடையாளத்தைக் கட்டமைக்​க​வும், சமூகத்​தில் அங்கீ​காரம் பெறவும் வாய்ப்பு​களைத் தேடு​கிறார்​கள். கூடு​தலாக, கல்லூரிக் காலத்​தில் நெருக்​கமான நட்புறவுகளை உருவாக்கு​கிறார்​கள். உலகம் முழு​வதும் உள்ள உண்மை இது.

வெளி​நாடு​களில், மாணவர்​களும் இளைஞர்​களும் ஆடை அணியும் நேர்த்தி, சுத்​தமான காலணி, தலை வாரும் அழகு, பேசும் தொனி, பழகும் விதம் அனைத்​தின் வழியாக​வும் தாங்கள் பள்ளி, கல்லூரி​களில் படிக்​கும் மாணவர்கள் என்ப​தைக் கல்விக்​கூடத்​துக்கு உள்ளே​யும் வெளி​யே​யும் வெளிப்​படுத்து​வதைக் கண்டு நான் வியந்​திருக்​கிறேன். நடை, உடை, பாவனை​களில் தங்களைச் சிறப்​பாகக் காட்​டிக்​கொள்வதே தாங்கள் படிக்​கிறவர்​கள், நாகரி​க​மானவர்கள் என்பதன் முதல்​கட்ட அடையாளம் என்பதை அவர்கள் அறிந்து வைத்​திருக்​கிறார்​கள்.

அச்சுறுத்தும் நிலவரம்: அதே வயதுடைய நம் இளைஞர்​கள், விதி​முறைகள் கடுமையாக இல்லாத கல்லூரி​களில் பேராசிரியர்களை எதிர்ப்​பது, குழு​வாகத் திரண்டு பிறரை மிரட்டு​வது, பெண்​களைக் கேலி செய்​வது, வகுப்பு​களைப் புறக்​கணிப்​பது, பாடங்​களில் தோல்வி அடைவதைப் பெருமை​யாகப் பேசுவது, கல்லூரி வளாகத்​துக்கு உள்ளே​யும் பிற கல்லூரி மாணவர்​களிட​மும் வன்முறை​யில் ஈடுபடு​வது, பேருந்துகளில் அடாவடித்​தனம் செய்​வது, ஆடை, காலணி, தலைமுடி, பேசும் தொனி என எதிர்​மறை​யாகத் தங்களை வெளிப்​படுத்தி, தங்களின் அடையாளத்தை உருவாக்​கிக்​கொள்​கிறார்​கள். கல்லூரி​களில் இருந்த இந்நிலை பள்ளி​களிலும் பரவி, பணத்​துக்காக எதையும் செய்யும் கூலிப்​படை​யாகச் செயல்​படும் அளவுக்கு வளர்ந்​திருக்​கிறது.

தள்ளு - இழு கோட்​பாடு: இவர்கள் ஏன் எதிர்​மறைச் செயல்​களால் தங்கள் அங்கீ​காரத்தை​யும் அடையாளத்தை​யும் உருவாக்கு​கிறார்​கள்? குற்றம் இழைப்​பவர்களை நண்பர்​களாக ஏன் தேர்வு செய்​கிறார்​கள்? உயிருக்கு ஆபத்து இருக்​கும் எனத் தெரிந்தும் ஏன் பணத்​துக்​காகக் குற்றச் செயல்​களில் பங்கெடுக்​கிறார்​கள்? டெக்கர் - வான் வின்​கிளே (Decker and van-Winkle) இருவரும் தள்ளு – இழு (Push & Pull) எனும் கோட்​பாட்​டின் வழி இதை விளக்கு​கிறார்​கள். குடும்​பம், சமூகம், கல்விக்​கூடம், தனிநபர் காரணங்கள் போன்றவை குற்​றங்​களி​லும் வன்முறை​யிலும் ஈடுபடும் குழுக்களை நோக்கி இளைஞர்​களைத் தள்ளுகின்றன. அதில், குடும்பம் மிக முக்​கியப் பங்கு வகிக்​கிறது.

பெற்​றோரின் போதை - மதுப் பழக்​கம், குடும்பத்​தில் நடக்​கும் அடிதடி வன்முறை, அல்லது குடும்பத்​தினர் குற்றச் செயல்​களில் ஈடுபடுவது போன்ற காரணி​களால் இவர்​களின் பிள்ளைகள் குற்றக் குழுவை நோக்​கித் தள்ளப்படுகிறார்​கள்.

பள்ளிக்​கூடத்​தில் ஒரு தவறு நடந்துவிட்டால், பொறுமை​யும் இல்லாமல், சட்டத்தின் மீதான நம்பிக்கை​யும் இல்லாமல் வன்முறை​யில் இறங்கி, பள்ளிக் கட்டிடத்தை அடித்து உடைக்கும் பெற்​றோர்​களாக நாம் இருக்​கும்​போது, நம் பிள்​ளை​களும் வன்முறையை நோக்​கித்​தானே தள்ளப்​படு​வார்​கள்? அதேவேளை​யில், பெற்​றோரின் கண் காணிப்பு, கனிவு, மனநல ஆதரவு உள்ள குடும்​பங்​களி​லும், மகன் அல்லது மகளின் நண்பர்​களைப் பெற்​றோர்கள் தெரிந்து வைத்​திருக்​கின்ற குடும்​பங்​களி​லும் குற்றக் குழுவை நோக்கி மாணவர்​களும் இளைஞர்​களும் தள்ளப்​படுவது குறைவாக உள்ளதை ஆய்வுகள் மெய்ப்​பிக்​கின்றன.

சமூகத்​தின் சமத்து​வ​மற்ற வளர்ச்சி, குறிப்​பிட்ட பிரச்சினை​களின் தீவிரத்தைக் கண்டு, ‘இப்​பிரச்சினையை யாருமே சரி செய்ய மாட்​டார்​களா?’ என்கிற கோபம், குற்​றங்களை நியாயப்​படுத்​தும் நிகழ்வு​கள், திரைப்​படக் காட்​சிகள், தாராள​மாகக் கிடைக்​கும் போதைப் பொருள் - மது, நண்பர்​களு​ட​னும் உறவினர்​களு​ட​னுமான விபரீதமான உரையாடல்கள் குற்றக் குழுவை நோக்கி இளைஞர்​களைத் தள்ளுகின்றன.

அவர்கள் வாழும் பகுதி​யில் அல்லது படிக்​கும் கல்லூரி​யில் ஏற்கெனவே உள்ள குழு​வில் எளிதில் சேர்ந்து​கொள்​கிறார்​கள். கல்லூரி என்றாலே ஒழுங்​கீனமாக இருப்​பது​தான் கெத்து, மரியாதை என்ப​தைத் திரைப்​படங்கள் பல பத்தாண்​டு​களாகத் தொடர்ந்து கட்டமைத்து வைத்​திருக்​கின்றன. இச்சூழல், அங்கீ​காரம் தேடும் இளைஞர்​களைக் குற்றக் குழுவை நோக்​கித் தள்ளுகிறது.

எளிதில் கோபப்​பட்டு அடிதடி​யில் இறங்கும் மாணவர்கள் தங்களைப் போன்று குற்றக் குணம் உள்ளவர்​களுடன் எளிதில் சேர்ந்து​கொள்​கிறார்​கள். தான் தவறே செய்​யா​விட்​டாலும், தவறிழைக்​கும் மாணவர்கள் நண்பர்​களாக இல்லா​விட்​டாலும், கற்றல் குறை​பாடு​களால், இன்ன பிற காரணங்​களால் பிறர் தங்களை ஒதுக்​கும்​போதும், ஆசிரியர்கள் எதிர்மறை முத்​திரை குத்​தும்​போதும், நல்ல முன்​மா​திரி ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லாத​போதும் நற்குணம் மிக்க மாணவர்​கள்​கூடக் குற்றக் குழுவை நோக்​கித் தள்ளப்​படு​கிறார்கள் என்கின்றன ஆய்வு​கள். மேலும், தன்னம்​பிக்கைக் குறைவுள்​ளவர்​கள், எளிதில் உணர்ச்சிவசப்​படக்​கூடிய​வர்கள் சமூகத்​தின் மீது நம்பிக்கை இழக்​கும்​போது குற்றக் குழுக்களை நோக்​கித் தள்ளப்​படு​கிறார்​கள்.

இழு என்பது, ஏற்கெனவே குற்றக் குழுக்​களில் இருக்​கிறவர்கள் மற்ற இளைஞர்​களைத் தங்கள் வசம் இழுப்​பது. முடி​வெடுக்க இயலாமல் தடுமாறுகிறவர்​கள், மாற்​றங்கள் உடனே நிகழ வேண்​டும் என நினைக்​கிறவர்​கள், எதுவுமே சரியில்லை எனக் குறை சொல்​கிறவர்​கள், தங்களை யாரும் மதிக்க​வில்லை எனப் புலம்​பு​கிறவர்கள் மிக எளிதாக இழுக்​கப்​படு​கிறார்​கள்.

தண்டனைக்கு உரிய குற்றம் செய்​தா​லும், அவர்​களுக்கு ஒருவகையான அங்கீ​காரம் கிடைக்​கிறது. மற்றவர்கள் அவர்​களைக் கண்டு பயப்​படு​வ​தால் ‘மதிப்பு உயர்​கிறது’. நண்பர்கள் கிடைக்​கிறார்​கள். பணம் கிடைக்​கிறது. பயமுறுத்தி இழுக்​கப்​படு​கிறவர்​களும் உண்டு. சேர்ந்த பிறகு விலக நினைத்​தால் மூளைச்​சலவை செய்து தக்கவைப்​பார்​கள். மறுத்​தவர்கள் கொல்​லப்​பட்ட வரலாறும் தமிழ்​நாட்டுக்கு உண்டு.

ஒருங்​கிணைந்த செயல்​பாடுகள்: குற்றம் இழைத்த பிறகு தண்டிப்​ப​தற்​குச் சட்டங்கள் உள்ளன. ஒருவேளை, மிகவும் கொடூரமான குற்​றங்​களைச் (Heinous) செய்​கிறவர்கள் 16 – 17 வயதுடைய​வர்​களாக இருந்​தா​லும், அவர்​களைப் பெரிய​வர்​களாகக் கருத இந்திய சிறார் நீதிச் சட்டம் அறிவுறுத்து​கிறது. ஆனாலும், வருமுன் காப்​பது​தானே தமிழகத்​தின் முழக்​கம். குடும்பத்​தில் இருந்தும் சமூகத்​தில் இருந்தும் குற்றக் குழுக்களை நோக்கி இளைஞர்​களைத் தள்ளும் காரணிகளை இனம் கண்டு சரி செய்ய வேண்​டும்.

அதற்கு, போதைப் பொருள்​களும் மதுவும் தடையின்​றிக் கிடைப்​ப​தைத் தடுக்க வேண்​டும்; கூலிப்​படை​யாகப் பயன்​படுத்து​கிறவர்​களைத் தண்டிக்க வேண்​டும்; கல்விக்​கூடங்களை வன்முறைக் கூடமாகக் காட்டும் திரைக் காட்​சிகளுக்​குத் தடை விதிக்க வேண்டும்; தரமான கல்வி​யும், அதற்​கேற்ற வேலை​யும் கிடைப்பதை உறுதிப்​படுத்த வேண்​டும்; நல்லொழுக்கக் கல்விக்கு முக்​கி​யத்துவம் கொடுக்க வேண்டும்; விளை​யாட்டு, கலை, நேர்மறை நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளிக்க வேண்​டும்; பெற்​றோரும் ஆசிரியர்​களும் நல்ல முன்​மா​திரிகளை அடையாளம் காட்ட வேண்​டும்; பிள்​ளைகள் எங்கே போகிறார்​கள், வருகிறார்கள் என்ப​தைப் பெற்​றோர் கண்காணிக்க வேண்​டும்.

பெற்​றோருக்​கும் பிள்​ளை​களுக்​கும் இடையே கலந்துரை​யாடல் நிகழ வேண்​டும்; கல்விக்​கூடத்​தில் பிரச்சினைகள் ஏற்படும்​போது, அது குறித்து மாணவர்கள் மத்தி​யில் உரையாட வேண்​டும்; தேவைப்​பட்​டால் சட்டத்​தின் துணை கொண்டு உடனடி​யாகத் தீர்வு காண வேண்​டும்.

குற்றக் குழுக்​களால் இழுக்​கப்​பட்​ட​வர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்​டும்: சட்டத்துறை, சமூகச் செயல்​பாட்​டாளர்​கள், பள்ளி - கல்லூரி நிர்​வாகம் - குடும்பத்​தினர் இணைந்து திட்​ட​மிட்டுச் செயல்பட வேண்​டும்; தவறிழைத்​தவர்​களைப் பாரபட்​சமின்​றிச் சட்​டத்​தின் முன் நிறுத்த வேண்​டும். இளைஞர்​களின் வாழ்வை மிகுந்த பொறுப்பு​டன் கையாண்டு, அவர்​களுக்​குச் சரியான வழி​காட்டு​வதன் மூலம்​தான் பாது​காப்பான சமூகத்தை உரு​வாக்க முடி​யும் என்​பதை அனைவரும் உணர வேண்​டும்​.

- தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.co

SCROLL FOR NEXT