பல்லவ அரசன் மகேந்திரவர்ம பல்லவன் 1300 வருடப் பழமையான ‘மத்த விலாசப் பிரகசனம்’ என்ற வடமொழி நாடக நூலை எழுதியுள்ளார். மத்த விலாசப் பிரகசனம் என்றால் ‘கள் குடியன் நாடகம்’ எனப் பொருள்படும் ஒரே ஒரு அங்கம். நான்கே நான்கு காட்சிகளைக் கொண்டது இந்த நாடகம். முதல் காட்சியில் காஞ்சி நகர் வீதியில் சிவ நெறியின் பிரிவுகளில் ஒன்றான காபாலி மதத்தைச் சேர்ந்த சத்திய சோமனன் என்னும் ஒருவன் கள்ளுண்டு போதையில் மயங்கியவனாகத் தன் காதலியோடு களித்துச் சொல்லாடிக் கொண்டுவருகிறான். போதையில் வாய் உளறி, காதலியின் பெயரை மாற்றிச் சொன்னதனால் இருவருக்கும் நடுவே சண்டை சச்சரவு வருகிறது. ‘‘இதற்குக் காரணம் இந்தக் குடிப்பழக்கம்தானே, நான் இதை இன்றோடு விட்டுவிடப் போகிறேன்” என்கிறான் காபாலி. அவளோ “இந்தத் தூய்மையான சமய ஒழுக்கத்தைக் கைவிட வேண்டாம்” என்று கேட்டுக்கொண்டு அவனைத் தொழுது காலில் விழுகிறாள். அவன் அவளை எடுத்து அணைத்து “சிவ சிவா, அரஹரா அரஹரா” என்று முணுமுணுத்துக்கொண்டே, “அருமைக் காதலியே! நீ நன்றாய், அழகாக உடுத்திக்கொள்; நன்றாகக் குடி. உன் மான் விழியால் என்னைப் பார்” என்று சொன்னதோடு மட்டுமல்லாமல் இதுதான் “இறைவனை அடைவதற்கான முத்தி நெறி” என்று தன் சமயநெறியின் கோட்பாட்டையும் கூறுகிறான்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
3 mins ago
தமிழகம்
9 mins ago
தமிழகம்
17 mins ago
தமிழகம்
30 mins ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
இந்தியா
1 hour ago
விளையாட்டு
2 hours ago
இந்தியா
2 hours ago