எழுத்தாளர் ஆனேன்: இமையம் | எழுத்தாளனை உருவாக்கிய நாவல்

By இமையம்

நான் எழுதிய முதல் கவிதை,சிறுகதை எது? தெரியவில்லை. ஆரம்பத்தில் கவிதைகள்தான் எழுதினேன். அடுத்ததாக, சிறுகதைகளை எழுத முயன்றேன். ‘விடியல்’,‘புரட்சி’, ‘திரள்வோம்’ போன்ற வார்த்தைகளுடன்தான் என்னுடைய அப்போதைய கவிதைகள் முடியும். 1985 காலகட்டத்தில் தமிழில் எழுதப்பட்ட பெரும்பாலான கவிதைகளின் முடிவு அப்படித்தான் இருக்கும். புனைபெயர் வைத்துக்கொள்வதும் அப்போது ஒரு போக்காக இருந்தது. உருப்படியாக ஒரு வரிகூட எழுதாத நான் ‘இமையம்’ என்று வைத்துக்கொண்டதும் அப்படித்தான். இமயம் அல்ல; இமையம்; எல்லாம் கிறுக்குத்தனம்தான்.

நான் எழுதிய கவிதைகள் கிறித்துவ மிஷனரிகள் நடத்திய ‘அன்னை வேளாங்கன்னி’ போன்ற இதழ்களில் மட்டுமே வெளிவந்தன. அந்தப் பத்திரிகைகள் எதுவும் என்னிடம் இப்போது இல்லை. இரண்டு சிறுகதைகள் நினைவில் இருக்கின்றன. வரதட்சிணைக் கொடுமை பற்றிய ஒரு கதை. மற்றொன்று, திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்துக்கு அருகிலுள்ள கிறிஸ்துவ இடுகாட்டில் இருக்கும் காவலாளியைப் பற்றிய கதை. அந்தக் கதை குறித்து இலக்கிய நண்பர்கள், ‘வெரி குட் அட்டம்ட்’ என்று சொன்னார்கள். அந்தக் கதைகளும் இப்போது என்னிடம் இல்லை. ‘நாடக வெளி’ இதழில் மூன்று நாடகங்கள் வெளிவந்தன. நான் நாடகங்கள் எழுதியிருக்கிறேன் என்பதுஎனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. என்னுடைய நாடகங்களை வெளியிட்ட வெளி ரங்கராஜனைப் பாராட்டத் தோன்றுகிறது. என்னை ஊக்கப்படுத்தவே வெளியிட்டார் என்று இப்போது தோன்றுகிறது.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

2 mins ago

இந்தியா

11 mins ago

இந்தியா

15 mins ago

இந்தியா

31 mins ago

தமிழகம்

59 mins ago

தமிழகம்

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

இணைப்பிதழ்கள்

7 hours ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

1 hour ago

மேலும்