எனக்கு வான்காவின் ஓவியங்களை மிகவும் பிடிக்கும், நவீன ஓவியத்தின் தனிப்பெரும் கலைஞன் வான்கா. அவரது புகழ்பெற்ற ‘நட்சத்திரங்களுடனான இரவு’ (The StarryNight) என்கிற ஓவியம், தைல வண்ணத்தில் 29x36 அங்குல அளவில் வரையப்பட்டது. அது இன்று நியூயார்க் நவீனக் கலை அருங்காட்சியகத்தில் உள்ளது.
1889ஆம் ஆண்டு இந்த ஓவியத்தை வான்கா வரைந்தபோது, சென்ட் ரெமி என்ற இடத்தில் உள்ள மனநலக் காப்பகம் ஒன்றில் தங்கி சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தார். அவருக்குத் தீவிரமான மனக்குழப்பங்களும் சஞ்சலங்களும் கடுமையான தனிமையும் மிக்க நாள்கள் அவை. இந்த ஓவியத்தைத் தனது படுக்கை அறையின் ஜன்னல் வழியாகப் பார்த்து வரைந்தார் என்கிறார்கள். ஆனால் ஓவியத்தில் நாம் காண்பது, அவரது நினைவில் எரிந்துகொண்டேயிருக்கும் இரவு ஒன்றின் மிச்சமே. ஓவியத்தைப் பார்க்கும்போது நமக்கு முதலில் தோன்றுவது மயக்கமூட்டும் எவ்வளவு அற்புதமான இரவு என்பதே.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
தமிழகம்
17 mins ago
தமிழகம்
1 hour ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
1 hour ago
தமிழகம்
2 hours ago
இந்தியா
2 hours ago
இந்தியா
2 hours ago
சினிமா
4 hours ago
ஜோதிடம்
6 hours ago
ஜோதிடம்
6 hours ago
தமிழகம்
11 hours ago
சினிமா
12 hours ago