தமிழ்ப் பதிப்புலகில் ஒரு வைகறை!

By தஞ்சாவூர்க் கவிராயர்

தமிழ் மண் சார்ந்த இடதுசாரி நோக்கத்துடன் புத்தகங்களை வெளியிடுவது என்ற தீர்மானத்துடன் 1982இல் கார்க்கி நூலகம் பதிப்பகத்தைத் தொடங்கி, வி.பி.சிந்தனின் ‘இந்திய மண்ணில் பொருள் முதல்வாதக் கருத்துகள்’ என்ற நூலிலை வெளியிட்ட பதிப்பாளர் வைகற (வைகறைவாணன்) இதுவரை எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களைத் தமது ‘பொன்னி’, ‘சாளரம்’ ஆகிய பதிப்பகங்கள் மூலம் வெளியிட்டிருக்கிறார்.

ஏ.கே.செட்டியாரின் ‘குடகு’, கல்கியின் ‘தமிழ்ப் பாட்டுக் கிளர்ச்சி’ ஆகிய நூல்களை மறுபதிப்பாக வெளியிட்டிருக்கிறார். ‘வீரத்தெலுங்கானா சொல்லும் கதைகள்’, ‘ஏழாவது ஊழி’, ‘தோல்விகளின் ஒப்புதல்’, இன்குலாபின் கவிதைத் தொகுப்பான ‘ஒவ்வொரு புல்லையும்’, பூமணியின் முழுச் சிறுகதைத் தொகுப்பு ‘அம்பாரம்’, 5 நாவல்களின் தொகுப்பு போன்ற நூல்கள் குறிப்பிடத்தக்கவை.

திருவையாறு அரசர் கல்லூரியில் படித்தவர். பழம்பெரும் தமிழ் அறிஞர் தி.வே.கோபாலய்யரிடம் பாடம் கேட்டவர். கொள்ளிடத்தின் நடுவே நீர் சூழ்ந்த தீவாக அமைந்துள்ள இராமநத்தம் இவர் பிறந்த ஊர். நாணல் கூரைவீடு, சாணம் மெழுகிய தரை, எங்கும் மணல் மேடுகள், மணல் மூடிய தெருக்கள் வெளியுலகத்திலிருந்து துண்டிக்கப்பட்டு வாழ்ந்த கிராமத்திலிருந்து சென்னைக்கு வந்து, அரணமுறுவலின் வழிகாட்டலில் அச்சுத் தொழிலில் ஈடுபட்டார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

1 min ago

வாழ்வியல்

44 mins ago

சினிமா

56 mins ago

சினிமா

5 hours ago

தமிழகம்

5 hours ago

சினிமா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

2 hours ago

தமிழகம்

2 hours ago

இந்தியா

2 hours ago

இந்தியா

2 hours ago

மேலும்