அஞ்சலி: ஔவை நடராசன் | சொற்பொழிவு அருவி

By செய்திப்பிரிவு

பேராசிரியர் ஒளவை நடராசன் (1936 – 2022). விழுப்புரத்திற்கு அருகில் உள்ள ஔவைக்குப்பம் என்ற கிராமத்தில் பிறந்தவர். புதுடெல்லி அகில இந்திய வானொலி நிலையச் செய்தி வாசிப்பாளர், தமிழக அரசின் மொழிபெயர்ப்புத் துறை இயக்குநர், தமிழ் வளர்ச்சி - பண்பாட்டுத் துறைச் செயலர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர், செம்மொழி நிறுவனத்தின் துணைத் தலைவர், இறுதியாக 2015 முதல் பாரத் பல்கலைக்கழகத்தின் நிரந்தர வேந்தர் முதலிய பல்வேறு பணிகளின் மூலம் தன் வாழ்க்கைப் பயணத்தை அனுபவச் செழுமையோடு நிரப்பியவர். எல்லாவற்றிற்கும் மேலாக உலகத் தமிழர்கள் அனைவரும் போற்றும் சொற்பொழிவாளராகவும் பட்டிமன்றப் பேச்சாளராகவும் புகழ்பெற்றுத் தமிழர்களின் மனப்பரப்பில் அவர் நிலைபெற்றுள்ளார்.

தனிப் பாணி: இளமையிலேயே திராவிட இயக்கத் தலைவர்களின் மேடைப் பேச்சால் ஈர்க்கப்பட்டவர் ஒளவை. மேன்மையான ஒரு மேடைப் பேச்சை எவ்வாறு நிகழ்த்திக் காட்டுவது என்பதை நுணுக்கமாகப் புரிந்துகொண்டு, தனக்கெனத் தனிப் பாணியை அமைத்துக்கொண்டார். கனமான செய்திகளையும் கருத்துகளையும் எவ்வாறு எளிய மொழியில் எடுத்துரைப்பது என்ற நுட்பத்தைக் கடைப்பிடித்தார். எந்த ஒரு பொருளைக் குறித்துச் சொற்பொழிவாற்றினாலும் முதலில் ஓர் ஆலாபனை மாதிரி மெதுவாகத் தொடங்கிக் கொஞ்சம் கொஞ்சமாகப் பொருளின் மையத்திற்குள் நுழைந்து அலசுவார்; அப்பொருள் குறித்து இதுவரை யாராலும் சொல்லப்படாத பல புதுக் கருத்துகளைப் பார்வையாளர்களுக்குக் கடத்திவிடுவார்.
எடுத்துரைக்கும் முறையில் ஆழமான நகைச்சுவை உணர்வு ஒன்று இயல்பாக ஓடிக்கொண்டிருக்கும். கடைந்து கடைந்து தேர்ந்தெடுத்த சொற்களைக் கையாளுவார்.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

சினிமா

10 mins ago

வலைஞர் பக்கம்

13 mins ago

தமிழகம்

46 mins ago

தமிழகம்

1 hour ago

சினிமா

19 mins ago

விளையாட்டு

1 hour ago

விளையாட்டு

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

2 hours ago

ஓடிடி களம்

2 hours ago

விளையாட்டு

2 hours ago

மேலும்