நூல் நயம்: இலக்கியவாதியின் சினிமாப் பிரதி

By செய்திப்பிரிவு

திரைப்பட இயக்குநர் ஜான் ஆபிரகாமின் புகழ்பெற்ற திரைப்படம் ‘அக்ரஹாரத்தில் கழுதை’. இந்தப் படத்தின் திரைக்கதையை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் எழுதினார். இந்தப் படம் சிறந்த படத்துக்கான தேசிய விருதையும் பெற்றது. பேராசிரியர் ஒருவர் தாயை இழந்த கழுதைக் குட்டி ஒன்றை வளர்க்கப்போக, அதனால் சமூகரீதியில் ஏற்படும் பிரச்சினைகள்தாம் கதை. நகரத்தில் கழுதை வளர்க்க முடியாமல் போக, தன் கிராமத்து அக்ரஹாரத்துக்குக் கழுதைக் குட்டியைக் கொண்டுசெல்கிறார். இதன் திரைக்கதை வெங்கட் சாமிநாதனால் தொகுக்கப்பட்டுப் புத்தகமாக வந்தது. அதன் மறுபதிப்பு இது. இதன் திரைக்கதை குறித்து எழுத்தாளர்கள் தி.ஜானகிராமன், சுந்தர ராமசாமி, சி.மோகன் ஆகியோர் வெ.ச.வுக்கு எழுதிய கடிதங்கள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. சுரா இதன் மீது கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். தி.ஜா.வும் சி.மோகனும் பாராட்டியுள்ளனர். ஜான் ஆபிரகாம் ஆளுமை குறித்த வெ.சா.வின் கட்டுரையும் இந்தத் தொகுப்பில் உள்ளது. பிரமிளின் முன்னுரையும் வாசிப்புக்குச் சுவாரசியம் சேர்க்கிறது. திரைப்படம் குறித்து எழுத்தாளர் ந.முத்துசாமி, இயக்குநர் ஞான.ராஜசேகரன் ஆகியோர் எழுதிய கட்டுரைகளும் இந்தத் தொகுப்பின் இறுதியில் தொகுக்கப்பட்டுள்ளன. சினிமா பயில்வோருக்கு இந்தத் திரைக்கதைப் புத்தகம் ஒரு வழிகாட்டியாக இருக்கும். - ஜெயன்

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

ஜோதிடம்

1 hour ago

ஜோதிடம்

1 hour ago

விளையாட்டு

5 hours ago

சினிமா

7 hours ago

விளையாட்டு

8 hours ago

வணிகம்

8 hours ago

தமிழகம்

9 hours ago

விளையாட்டு

9 hours ago

க்ரைம்

10 hours ago

சுற்றுச்சூழல்

10 hours ago

க்ரைம்

10 hours ago

இந்தியா

10 hours ago

மேலும்