இந்திய அளவில் மிக அதிகமாகப் புத்தகங்கள் வெளியாகும் மொழிகளில் தமிழ் இரண்டாவது இடத்தில் உள்ளது. 60 கோடி மக்கள் பேசுகின்ற இந்தி மொழியில் 2021ஆம் ஆண்டு 21,645 புத்தகங்கள் வெளியாகின. அதே ஆண்டு, தமிழில் 17,190 புத்தகங்கள் வெளியாகின. தமிழுக்கு அடுத்ததாக வங்க மொழியில் 13,760 புத்தகங்களும் பிற தென்னிந்திய மொழிகளான தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகியவற்றில் தலா 4,000, 4,645, 6,160 புத்தகங்களும் வெளியாகின.
அனைத்து மாநிலங்களின் பதிப்பகச் சங்கங்களின் கூட்டமைப்பான புதுடெல்லியில் உள்ள இந்தியப் பதிப்பாளர்களின் கூட்டமைப்பு, கடந்த 75 ஆண்டுகளாகச் செயல்பட்டு வருகிறது. இதைக் கொண்டாடும் விதமாகச் செப்டம்பர் 30ஆம் தேதியன்று டெல்லியில் விழா எடுக்கப்பட்டது. கூடுதல் சிறப்பாக இந்தியப் பதிப்புத் துறை குறித்து மலர் கொண்டுவரப்பட்டது. வெறும் வாழ்த்துகள் நிறைந்த மலராக அல்லாமல் பதிப்புத் துறைக்குப் பயனளிக்கும் வகையில் பல்வேறு தகவல்களைத் திரட்டித் தொகுத்துள்ளனர். முதன்முறையாக ‘நீல்சன்’ என்கிற அமைப்பின் துணையோடு இந்தியப் பதிப்புத் துறையைக் குறித்து நாடு தழுவிய ஆய்வு மேற்கொண்டு, அதன் முடிவுகளையும் பதிப்பித்துள்ளனர். (அவ்வறிக்கை தனிப் புத்தகமாகக் கொண்டுவரப்பட்டு இவ்வாண்டு ஃப்ராங்க்பெட் புத்தகக்காட்சியில் வெளியிடப்பட்டது)
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
முக்கிய செய்திகள்
இந்தியா
50 mins ago
விளையாட்டு
1 hour ago
வணிகம்
1 hour ago
தமிழகம்
2 hours ago
வாழ்வியல்
29 mins ago
தமிழகம்
1 hour ago
ஓடிடி களம்
2 hours ago
தமிழகம்
2 hours ago
வணிகம்
2 hours ago
தமிழகம்
1 hour ago
இந்தியா
3 hours ago
தமிழகம்
2 hours ago