நூல்நோக்கு: ஆடற்கலை வளர்த்த அரும்பெருங்கோயில்

By செய்திப்பிரிவு

தஞ்சைப் பெருவுடையார் கோயிலை எடுப்பித்த இராஜராஜ சோழன், 48 பிடாரர்களை அவர்களுக்குரிய
இசைக் குழுவொடு திருமுறை விண்ணப்பிக்க ஏற்பாடு செய்தான். ஆடற்கலை வளர்ச்சிக்காக 400 தளிச்சேரிப் பெண்டுகளைப் பணியமர்த்தி, அவர்களுக்குத் துணைநிற்கும் குழுவினர் உட்படப் பலரைப் பணியமர்த்தினான்.

இந்தப் பெண்டுகளைப் பற்றி தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக இசைத் துறைத் தலைவர் செ.கற்பகம், 200-க்கும் மேற்பட்ட பக்கங்களில் தனிநூலை எழுதி வெளியிட்டுள்ளார். இந்நூல், தஞ்சை மற்றும் அதைச் சார்ந்த பிற பகுதிகளிலிருந்தும் பிற தலங்களிலிருந்தும் தருவிக்கப்பெற்ற தளிச்சேரிப் பெண்டுகளைத் தஞ்சை இராஜராஜேச்சரத்தில் பணியமர்த்தி, நாட்டிய வழிபாடு செய்திட ஏற்பாடு செய்தமையைக் கல்வெட்டுச் சான்றுகளோடு எடுத்துரைக்கிறது.

ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன் அவர்கள் பல திருக்கோயில்களில் நடனப் பணி மேற்கொண்டமையும் அவர்களுக்குத் தீட்சா நாமம் வழங்கியமையும், எந்தெந்த ஆலயத்திலிருந்து வந்துள்ளார்கள் என்பன பற்றியும், அவரவர்களுக்கு ஒதுக்கப்பட்ட தளிச்சேரி வீடுகள் பற்றியும் இந்நூல் விளக்கமுற எடுத்துரைத்துள்ளது. தஞ்சைத் தலத்துக்குப் பணியமர்த்தப்பட்டபோது, அவர்களுக்கு ‘நக்கன்மார்’ என்ற சிறப்பு அடைமொழி தரப்பட்ட செய்திகள் விளக்கப்பட்டுள்ளன.

  இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது

மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:

தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்

சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்

தடையற்ற வாசிப்பனுபவம்

VIEW COMMENTS

முக்கிய செய்திகள்

தமிழகம்

3 mins ago

இந்தியா

8 mins ago

தமிழகம்

29 mins ago

சினிமா

25 mins ago

தமிழகம்

47 mins ago

தமிழகம்

49 mins ago

க்ரைம்

55 mins ago

க்ரைம்

1 hour ago

இந்தியா

1 hour ago

இந்தியா

1 hour ago

தமிழகம்

1 hour ago

தமிழகம்

2 hours ago

மேலும்