இலக்கியம்

வாழ்க்கை சார்ந்த புரிதலின் பிரகடனம்

பால்நிலவன்

பாம்பு தன் சட்டையை உரிப்பதுபோல், தமிழ்க் கவிதையும் அவ்வப்போது சட்டையை உரித்துக்கொள்வதற்கு உதாரணம் யுகன் கவிதைகள். இவற்றில் எந்த கூடுதல் செய்நேர்த்தியும் இல்லை. மனதில் தோன்றும் கீற்றொளியைத்தான் அவர் எழுதிப் பார்க்கிறார்.

அது கவிதைதான் என நம்பத் தொடங்கியதில் இருந்து அவருக்கு கவிதை வசப்படத் தொடங்கிவிடுகிறது. அதில் பலவும் வெறும் ஸ்டேட்மென்ட்தான் என்று நினைத்திருப்பார் என்றால், கவிதை குறித்து மட்டுமல்ல; வாழ்க்கை குறித்து மெல்லிய நகைச்சுவை இழையோடும் பார்வை ஒருவருக்கு இருப்பதே கூட நமக்கு தெரிந்திருக்காது.

​காத்​திருக்​கும் குழந்​தை​யிடம் ஊஞ்​சலைக் கொடுக்​காமல், பூங்​கா​வில் யாரோ ஒரு எருமை ஊஞ்​சல் ஆடிக்​கொண்​டிருப்​ப​தில், தானும் வளர்ந்த குழந்தை என்று நினைத்​திருந்​தா​லும், அது அந்த எரு​மை​யின் தவறு​தான் என்​கிறார். இதில் உள்ள அறச்​சீற்​றம், வளர்ந்த ஆளை, ‘‘எருமை’’ என அழைக்க வைக்​கிறது.

கிராமத்​தில், மாடி​முற்​றத்​தில் மயில் பறந்​து​வந்து அமர்ந்​த​போது, நாம் முருகனைத்தான் கும்​பிடு​கிறோம் அதனால் தான் வீட்​டுக்கு மயில் வந்​துள்​ளது எனப்பேரனிடம் கூறி “இறகு போட்டு விட்​டுப்போ” என மயி​லிடம் கேட்க, இரண்​டு மூன்று இறகு​கள் போட்​டு​விட்​டுப் பறந்​து​போவது அழகான சித்​திரம். துரோகங்​கள், இழப்​பு​களுக்​குப் பிறகு, ராசிபலன் தெரிந்​து ​கொள்ள சோதிடம் பார்க்​கப்​போன கவிதைகள் எல்​லாம் சிரிப்​பில் ஆழ்த்​தக்​கூடியவை. ‘கிரகங்​களைத் துரத்​துபவன்’ நல்ல சுயபகடி கவிதை.

பழைய காதலி பற்​றிய கவிதைகள் ஆங்​காங்கே வரு​கின்​றன, அதை​விட கூடு​தலாக, சாதாரண வீட்​டுப் பிரச்​சினை​களில் உரு​வாகும் மனை​வி​யுட​னு​னான அன்​பின் சண்​டைகளும் கவிதை​யாகி​யுள்​ளன.

ஒரு கவிதை​யில் பழைய காதலிகள் பற்​றியப் பேச்​சில் மனைவி கோபித்​துக்​கொள்ள, கல்​யாணத்​துக்கு முன்​பும் பின்​பும் எனக்கு ஒரேகாதலி; அது நீதான் என முடித்​து​வைக்​கும்​போது, மனை​வி​யின் புன்​னகை​யால் பிரச்​சினை​யும் முடிகிறது. பாசாங்​கு​கள், நல்​ல​வன் முகமூடிகள் ஏது​மின்​றி, வாழ்க்​கையை லகு​வாக எடுத்​துக்​கொள்​வது யுக​னின் பொது​வான அம்​ச​மாக இருக்கிறது.

கிரகங்களைத் துரத்துபவன்
யுகன்
நன்றிணை பதிப்பகம்
விலை: ரூ.50
தொடர்புக்கு: 9486177208

- தொடர்புக்கு: sridharan.m@hindutamil.co.in

SCROLL FOR NEXT